Saturday, 7 November 2015

காதல் கவிதை

பகல் கனவு

இரவு முழுவதும் விழித்திருந்தேன்

விடியுமென்று.

விடிந்தவுடன் தூங்கிவிட்டேன்,

நீ வந்து போகும் பகல் கனவு

பலிக்குமென்று!!!

மறக்க நினைத்து…

உன்னை மறக்க நினைத்தாலே,

என் நினைவாக நீ வருகிறாய்.

உன்னை நான் நினைத்தாலோ,

என்னையே மறக்க செய்கிறாய்.

உன்னை மறக்க நினைப்பதா ?

இல்லை நினைத்து என்னை மறப்பதா ?

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.