Friday, 13 November 2015

தெரிய வேண்டாமா?

தெரிய வேண்டாமா? ஆப்பிரிக்கா என்றால் வெயில் நாடுஎன்று பொருள்' ****** பத்து வயதுப் பையனுக்குஒரு காயம் குணமாக ஆறு நாள் ஆனால் அதே அளவு காயம் ஆற இருபது வயது இளைஞனுக்கு பத்து நாட்களும்,முப்பது வயதுக்காரருக்கு பதிமூன்று நாட்களும்,நாற்பது வயதுக்காரருக்கு பதினெட்டு நாட்களும்,அறுபது வயதுக்காரருக்கு முப்பத்திரண்டு நாட்களும் ஆகும். ****** வாயில் சுரக்கும் உமிழ் நீரில் ptylin என்ற என்சைம் உள்ளது.இது ஜீரணத்திற்குத் தேவையானது.இது carbohydrate ஐ சர்க்கரை ஆக மாற்றுவதற்குச் சிறிது நேரம் பிடிக்கும்.எனவே உமிழ் நீருடன் உணவை நன்றாகக் கலக்கச் செய்யவும், சிறிது நேரம் ptlyin ஐ ஆக்கத்திற்கு உட்படுத்தவும் உதவும் வகையில் பற்களால் உணவை சிறிது நேரம் நன்றாய் அரைத்து மென்று கொண்டிருப்பது நல்லது.எனவே உணவை அவசரம் அவசரமாக விழுங்கக் கூடாது. ****** செண்டுகளின் நறுமணத்திற்குக் காரணம் அவற்றில் ஆம்பர் கிரீஸ் எண்ணும் பொருள் இருப்பதுதான்.இந்த ஆம்பர் கிரீஸ் ஒரு வகை திமிங்கலங்களின் குடலில் மட்டுமே உற்பத்தி ஆகிறது. ****** சிவப்பு நிறத்தை நீண்ட நேரம் உற்றுப் பார்த்து விட்டு வெள்ளை நிறத்தைப் பார்த்தால் பச்சையாகத் தோன்றும்.நீல நிறத்தை நீண்ட நேரம் உற்றுப் பார்த்துவிட்டு வெள்ளை நிறத்தைப் பார்த்தால் மஞ்சளாகத் தெரியும். ****** ஒட்டகச்சிவிங்கிக்குக் குரல் கிடையாது. ****** நிழல் உருவத்தை ஆங்கிலத்தில் சிலூட் (silhoutte)என்பார்கள்.இது ஒரு கொடியவனின் பெயர்.பதினெட்டாம் நூற்றாண்டில் பிரான்சு நாட்டின் நிதி அமைச்சராக இருந்த இவன் கடும் வரிகளைப் போட்டு மக்களின் வெறுப்புக்கு ஆளானவன்.'எங்கள் நிழலைத்தவிர வேறு எதையும் விட்டு வைக்காமல் இப்படி வரி போடுகிறானே!'என்று மக்கள் நொந்து கொண்டனர்.அதிலிருந்து நிழலை இகழ்ச்சியாக குறிப்பிடும் சொல்லாக சிலூட் நிலை பெற்று விட்டது. ******

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.