Friday, 13 November 2015

அகத்தியர்

அகத்தியர் அ- அ+ தேவர்கள் அனைவரும் இந்திரனின் முன்னால் போய் நின்றனர். தேவாதி தேவ! உலகில் அநியாயம் பெருத்து விட்டது. அரக்கர்களின் அட்டகாசத்தால், எவ்வுலகிலும் பக்தர்களால் யாகம், பூஜை, புனஸ்காரங்கள் செய்ய முடியவில்லை. எங்களுடைய அவிர்ப்பாகம் கிடைக்காததால், நாங்கள் படும் வேதனைக்கு எல்லையில்லை. எங்கள் சக்தி குறைந்து, அசுரசக்தி வேகமாகத் தலைதூக்குகிறது. நல்லவர்கள் நிம்மதியின்றி உள்ளனர். கெட்டவர்களோ, அந்த ராட்சஷர்களுடன் கைகோர்த்து சுகபோக வாழ்வு நடத்துகின்றனர். கெட்டவர்களின் தரம் உயர்ந்தால், நல்லவர்களும் நம் மீதான நம்பிக்கையை இழந்தல்லவா விடுவார்கள். தேவர் தலைவனே! தாங்கள் தான் எங்களைக் காத்தருள வேண்டும், என்றனர். இந்திரன் தேவர்களின் குறையை கருணையுடன் கேட்டான். தேவர்களே! கலங்க வேண்டாம். தேவராயினும், மனிதராயினும், சிறு பூச்சி புழுவாயினும், அவரவர் செய்த பாவ புண்ணியங்களுக் கேற்ப பலன்களை அனுபவித்தே தீர வேண்டும். எனினும், இதுகண்டு நீங்கள் அஞ்சத் தேவையில்லை. அசுரர்களில் உயர்ந்தவனான தாரகன் தவவலிமை மிக்கவன். கடலுக்குள் மறைந்து வாழும் சக்தி படைத்தவன். பிரம்மாவின் அருளால் சாகாவரம் பெற்றவன். ஒரு கும்பத்தின் அளவே உருவமுடைய ஒருவரே அவனைக் கொல்ல முடியும். ஆனால், அவன் குறிப் பிட்டுள்ள அளவு உயரமுள்ளவர் எவரும் பூவுலகில் இல்லை. பிரம்மனால் கூட அப்படிப்பட்டவரைப் படைக்க முடியாது. இருப்பினும், பிறந்தவர் மாள்வது உறுதி. நீங்கள் அமைதி காக்க வேண்டும். நான் அவர்களை கடலுக்குள் வசிக்க இயலாத அளவுக்குரிய ஏற்பாடுகளைச் செய்து வருகிறேன். பின்னர், அவர்களது தொந்தரவு குறையும், என்றான். தேவர்கள் அரைகுறை மனதுடன் தங்கள் இருப்பிடங்களுக்கு திரும்பினர். இந்திரன் ஆழ்ந்து யோசித்தான். கடலை வற்றச்செய்வது என்பது எப்படி ஆகக்கூடிய காரியம். என்ன செய்வது? என குழம்பிப் போயிருந்த வேளையில், அதுவே சரி, என ஒரு திட்டத்தை வகுத்துக் கொண்டான். அக்னிதேவனை தன் சபைக்கு வரச்செய்தான். அக்னி! நீ உடனே பூலோகத் துக்குச் செல். கடலுக்குள் அரக்கர்கள் ஒளிந்து கிடந்து நம் இனத்தாரை துன் புறுத்துகின்றனர். நீ கடலே வற்றும்படியாக வெப்பத்தை உமிழ். கடல் காய்ந்து போனதும், அரக்கர்கள் நம்மை துன்புறுத்தி விட்டு, ஓடி ஒளிய இடம் இல்லாமல் தவிப்பர். இதைப்பயன்படுத்தி அவர்களைக் கொல்ல ஏற்பாடு செய்வோம், என்றான். அக்னி சிரித்தான். இந்திரரே! தங்கள் யோசனை எனக்கு நகைப்பை வரவழைக்கிறது. அரக்கர்களை அழிப்பதே தேவர் களையும், பூலோக மக்களையும் காப்பாற்ற வேண்டும் என்பதற்காகத் தான். உலகில் கடல் இல்லை என்றால் மழை எப்படி பொழியும்? மழை இல்லை என்றால் ஆறுகள் எப்படி ஓடும்? ஆறுகள் இல்லையென்றால், நமக்கு அவிர்பாகம் தரும் யாகங்களை நடத்த தீர்த்தம் கூட இல்லாமல் போய் விடுமே. நீர் வாயுவை அழைத்துப் பேசும். ஒருவேளை வறண்ட காற்றால் அவன் கடலை வற்றச்செய்யக்கூடும், என்றான். இந்திரனுக்கு கோபம் வந்துவிட்டது. ஏ அக்னி! நான் இட்ட வேலையைச் செய்யும் வேலைக் காரன் நீ. தலைவனாகிய என்னையே எதிர்த்துப் பேசுகிறாயா?இந்த யோசனை யெல்லாம் இல்லாமலா நான் உன்னை கடலை வற்றச்செய்யும்படி பணிப்பேன். சொன்னதைச் செய்,என்றான்.அக்னியோ ஒரேயடியாக மறுத்து விட்டான். தாங்கள் என் எஜமானர் தான். எஜமானர் என்பதற்காக, அந்த எஜமானர் உள்ளிட்ட அத்தனை பேரையும் அழிக்கும் பாவத்தை நான் செய்ய மாட்டேன், எனச் சொல்லி விட்டு,கைகட்டி நின்றான். அடுத்து வாயு வரவழைக்கப் பட்டான். அவனிடமும் இந்திரன், கடல் சமாச்சாரம் பற்றிக் கூற, வாயுவும், அக்னி சொன்ன அதே பதிலையே சொன்னான். அக்னியும், வாயுவும் சொல்வதிலும் நியாயமிருக்குமோ என்னும் அளவுக்கு இந்திரனும் சிந்திக்க ஆரம்பித்து விட்டான். அத்திட்டத்தை கைவிட்டு, அவர்களை அனுப்பி விட்டான். ஆனால், சில நாட்களில் அரக்கர்களின் அட்டகாசம் அதிகரித்து, யாகங்கள் முழுமையாக நின்று போயின. யாக குண்டங்களில் அசுரர்கள் மாமிசத்தையும், ரத்த மழையையும் பொழிந்து தீட்டை உண்டாக்கினர். எந்த யாகமும் நடைபெறாமல் தேவர்கள் மெலிந்து போயினர். இப்போது, இந்திரனின் கோபம் அக்னி மற்றும் வாயுவின் மீதே திரும்பியது. மீண்டும் அவர்களை வரவழைத்து, ஏ அக்னி! ஏ வாயு! அன்று நான் சொன்னதை நீங்கள் செய்யாமல் போனதால், அரக்கர்கள் தங்கள் அட்டகாசத்தை முடித்து விட்டு, கடலுக்குள் போய் ஒளிந்து கொள்கின்றனர். கடலுக்குள் மறைந்திருப்பவர்களை யாரால் கண்டுபிடிக்க இயலும்? அவர்களைக் கொல்வதென்பது எப்படி சாத்தியம்? என் சொல்லைக் கேளாததால் ஏற்பட்ட துன்பத்தின் பலனை அனுபவிக்கும் வகையில், நீங்கள் பூலோகத்தில் பிறந்து மனிதர்கள் படும் வேதனையை அனுபவிக்க வேண்டும், என சாபமிட்டான். அக்னியும், வாயுவும் பூலோகத்தில் பிறந்தனர். அக்னி மித்திரா என்ற பெயரிலும், வாயு வருணர் என்ற பெயரிலும் வாழ்ந்தனர். இச்சமயம், தேவலோக மங்கையான ஊர்வசி, தான் செய்த தவறால், இந்திரனின் சாபம் பெற்று பூலோகம் வந்தாள். அவள், ஒரு நீர்நிலையில் நீராடிக் கொண்டிருந்த போது, அவளை மித்திராவும், வருணனும் பார்த்தனர். அப்படி ஒரு பேரழகியை அவர்கள் கண்டதே இல்லை. அப்போது, அவர்களிடம் இருந்து வீரியம் வெளிப்பட்டது. மித்திரர் தன் கையில் இருந்தகும்பத்தில் வீரியத்தை இட்டார். வருணரோ, அதைத் தண்ணீரில் இட்டார். கும்பத்தில் இருந்த வீரியம் வளர்ந்து ஒரு குழந்தையாக மாறியது. அது சில நாட்களில் கும்பத்தில் இருந்து வெளிப்பட்டு உயிர் பெற்று நடமாடியது. அந்த உருவம் கமண்டலம், ஜடாமுடியுடன் தோற்றமளித்தது. குடத்தில் இருந்து பிறந்ததால், அந்த குள்ள முனிவருக்கு கும்பமுனிவர் என்றும், குடமுனிவர் என்றும் தேவர்கள் அழைக்கலாயினர். அரக்கர்களைக் கொல்ல கும்ப அளவே உயரமுள்ள ஒரு முனிவர் பிறந்து விட்டதில் அவர்களுக்கு பெரும் மகிழ்ச்சி. இது ஒருபுறம் இருக்க, வாயுபகவான், தண்ணீரில் இட்ட வீரியத்தில் இருந்து வசிஷ்டர் பிறந்தார். இவர் அயோத்தியை நோக்கி போய் விட்டார். பிற்காலத்தில், இவர் மகாவிஷ்ணுவின் அவதாரமான ராமருடன் சேவை செய்ய வேண்டியிருந்ததைக் கருத்தில் கொண்டு அங்கு சென்று விட்டார். கும்பமுனி உருவத்தில் தான் குள்ளம். ஆனால், அவரது சக்தியோ எல்லை மீறியதாக இருந்தது. அக்னியில் இருந்து பிறந்தவர் என்பதால், இவர் உடலில் வெப்பம் தகித்தது. தன் வெப்பத்தை தணிக்க தண்ணீரின் மீதே படுத்திருப்பார். அவரிடம், தேவர்கள் தங்கள் குறையை வெளியிட்டனர். சுவாமி! தங்களால் மட்டுமே அரக்கர்களை அழித்து எங்களைக் காக்க முடியும், என்றனர்.அகத்தியர் அவர்களுக்கு அருள் செய்வதாக வாக்களித்தார். தேவர்களைக்காக்கும் தனது கடமை தடங்கலின்றி நிறைவேற, தனக்கு வசதியான தண்ணீரிலேயே தவத்தை துவங்கினார். 12 ஆண்டுகள் தொடர்ந்து தண்ணீரில் படுத்த படியே இறைவனை தியானித்தார். இறைவன் அருளும் கிடைத்தது. அரக்கர்களை சம்ஹாரம் செய்ய அவர்கள் மறைந்திருந்த கடலை நோக்கிச் சென்றார். தங்களை குள்ள முனிவர் ஒருவர் கொல்ல வந்துள்ளார் என்பதை அறிந்த அரக்கர்கள் தண்ணீரை விட்டு வெளியே வரவே இல்லை. ஆனால், அகத்தியர் விடுவாரா என்ன? தண்ணீர் முழுவதையும், தன் உள்ளங்கைக்குள் அடக்கி சித்து விளையாட்டு செய்தார். ஒட்டுமொத்த கடல் நீரும் அவர் கைக்குள் வந்தது. தீர்த்தம் குடிப்பது போல் குடித்து விட்டார். இதைப் பயன்படுத்திக் கொண்ட தேவர்கள், அசுரர்கள் மீது பாய்ந்தனர். இரு தரப்புக்கும் கடும் சண்டை நடந்தது. முடிவில், அரக்கர்கள் கொல்லப்பட்டனர். கடலையே சுருக்கி சாப்பிட்டவர் என்றால் சும்மாவா? மேலும், உலகையே காக்க வேண்டிய தேவர்களையே பாதுகாத்தவர் என்றால் அவரது சக்தி எத்தகையதாக இருக்கும்? அந்த மாமுனிவர், தான் வந்த வேலையை அத்துடன் முடித்துக் கொள்ள வில்லை. மகாவிஷ்ணு அப்போது மனித அவதாரமான ராமாவதாரம் எடுத்து இலங்கையிலே இருந்தார். ராமனின் மனைவியான சீதாவை, அந்நாட்டு அரக்க அரசனான ராவணன் தூக்கிச் சென்று விட்டான். அவளை மீட்பதற்காக பெரும்படையுடன் சென்றிருந்தும் கூட, அவரால் ராவணனை அவ்வளவு எளிதில் ஜெயிக்க முடியவில்லை. அங்கு சென்ற அகத்தியர், ராமனிடம் சூரிய வழிபாடு செய்வதன் மூலம் பெரும் பலம் பெறலாம் எனக்கூறி, ஆதித்ய ஹ்ருதயம் என்னும் ஸ்லோகங்களைப் போதித்தார். மேலும் அவருக்கு சிவகீதையையும் கற்றுத் தந்தார். ராமபிரானின் இலங்கை வெற்றிக்கு முக்கிய காரணகர்த்தாக்களில் அகத்தியரும் ஒருவர். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு இமயமலைச் சாரலுக்கு வந்தார். அப்பகுதியில் தவமிருந்தார். ஒருமுறை, இந்திரத்துய்மன் என்ற அரசன் ஆண்ட நாட்டுக்குச் சென்றார். அவன் அகத்தியரின் மகிமை அறியாமல் உரிய மரியாதை கொடுக்கவில்லை. பெரியவர்களுக்கும், முனிவர்களுக்கும் மரியாதை கொடுக்காதவன் அரசாளத் தகுதியில்லாதவன் என்று கூறிய அவர், நீ யானையாகப் போ என சாபம் கொடுத்தார். அவன் வருந்தி அழுதான். கருணைக்கடலான அகத்தியர், மன்னா! நீ பக்தன் தான். யோகங்களில் தலை சிறந்தவன். ஆனால், மமதை என்னும் மதம் உன்னை ஆட்டிப் படைக்கிறது. அதன் காரணமாகவே, உன்னை மதம் பிடித்த யானையாக மாற்றி விட்டேன். இதுவும் நன்மைக்காகவே நடந்தது, என்றார். இதனால் எனக்கு என்ன நன்மை கிடைக்கும் சுவாமி? என் மனைவி, மக்கள் என் பிரிவால் துன்புறுவார்களே! என கேட்ட போது, மோட்சம் செல்லப் போகிறவன், சம்சார பந்தத்தை துறக்க வேண்டும். நீ சாட்சாத் மகாவிஷ்ணுவின் மூலம் சாபவிமோசனம் பெற்று வைகுண்டம் சேர்வாய். பிறப்பற்ற நிலை சித்திக்கும், என அருள் செய்தார். பிறவித்துன்பத்தில் இருந்து விடுதலை கிடைக்கும் என்றால், யானையாகத் திரிவதில் தனக்கு சம்மதமே என்ற இந்திரத்துய்மன், காட்டில் அலைந்து திரிந்தான். பின்னர், முதலை ஒன்று அதன் காலைக் கவ்வ, அது ஆதிமூலமே என அலற, ஆதிமூலமாகிய மகாவிஷ்ணு அதனைக் காப்பாற்றி வைகுண்டம் சென்று சேர்த்தார். இப்படி ஆடம்பரத்தில் சிக்கித் திளைத்த அரசர்களுக்கு வைகுண்ட பிராப்தி அளிப்பவராகவும் அகத்தியர் விளங்கினார். சிவசிந்தனை தவிர வேறு ஏதும் அறியாத அகத்தியர், தவத்திலேயே ஈடுபட்டிருந்தார். இமயமலையில், பார்வதி, பரமேஸ்வரனுக்கு திருமணம் நடக்க இருந்த வேளையில், உலகை சமநிலைப்படுத்த அகத்தியரை பொதிகை மலைக்கு அனுப்பி வைத்தார் சிவபெருமான். அவர் அங்கிருந்து புறப்பட்டு வரும் வழயில், ஒரு மரத்தில் சிலர் தலைகீழாகத் தொங்குவதைப் பார்த்தார். அவர்கள் அகத்தியா! அகத்தியா! என கத்தினர். நீங்களெல்லாம் யார்? என் பெயர் உங்களுக்கு எப்படி தெரியும்? நான் தவவலிமை மிக்கவன். அக்னி- ஊர்வசி புத்திரன். என்னை வடபுலத்தோர் மட்டுமே அறிவார்கள். தென்திசையிலுள்ள உங்களுக்கு என் பெயர் எப்படி தெரிந்தது? என்னிலும் வலிமை மிக்கவர்களாகத் திகழ்கிறீர்களே! உங்கள் தரிசனம் கிடைத்ததில் மகிழ்ச்சியடைகிறேன், என்ற அகத்தியர் அவர்களை தன்னையறியாமல் வணங்கினார். அகத்தியா! நீ சொன்ன தெல்லாம் சரிதான். நாங்கள் உன் முன்னோர்கள். உன்னைப் போலவே தவவாழ்வு வாழ்ந்தவர்கள். இருப்பினும், எங்களால் சுவர்க்கத்தை அடைய முடியவில்லை. சொர்க்கம் செல்ல துறவறம் மட்டுமே உதவாது. இல்லறத்துக்கு பிறகே துறவறம் பூண வேண்டும். யார் ஒருவருக்கு ஆண் குழந்தை இல்லையோ, அவர்கள் பிதுர்களின் உலகை அடைய முடியாது. ஆண் குழந்தையே கொள்ளி வைக்க தகுதியானவன். அதனால் எங்கள் அன்பு மகனே! நீ திருமணம் செய்து கொள். ஒரு மகனைப் பெறு. அவன் மூலமாக எங்களுக் குரிய தர்ப்பணம், சிரார்த்தம் செய்து எங்களுக்கு சொர்க்கப்பாதையைக் காட்டு. இல்லாவிட்டால், நாங்கள் இந்த மரத்திலேயே தொங்க வேண்டியது தான், எனக் கூறி வருந்தினர். உயரத்தில் குள்ளமான அவருக்கு யார் பெண் தருவார்கள்? மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிதென்பார்கள் நம்மவர்கள். அதுபோல, அகத்தியர் உயரத்தில் மிகச்சிறியவர் என்றாலும், அவரது மகிமைகளை அறிந்த பெண்மணி ஒருத்தி, நிச்சயம் வாழ்க்கைப்பட்டே தீருவாள். தென்னகம் வரும் வழியில், அவர் விதர்ப்பம் என்ற நாட்டை அடைந்தார். அந்நாட்டு மன்னன் யாகம் ஒன்றை நடத்திக்கொண்டிருந்தான். அதில் பங்கேற்க அகத்தியரை அவன் அழைத்துச் சென்றான். யாகத் தீ கொழுந்து விட்டெரிந்த போது, அதில் இருந்து ஒரு பெண்மணி வெளிப்பட்டாள். அப்போது அசரீரி தோன்றி, அகத்தியரே! நீர் இந்தப்பெண்ணை மணந்து கொள்ளும். இவளது பெயர் உலோபமுத்திரை, என்றது. அகத்தியரும் தெய்வ வாக்கிற்கேற்ப அவளது சம்மதத்தைக் கேட்டார். மாமுனிவரே! நான் இந்நாட்டில் தோன்றியதால், விதர்ப்ப தேசத்தரசரே என்தந்தையாகிறார். அவர் சம்மதம் தெரிவித்தால், நான் உங்கள் மனைவியாகிறேன், என்றாள். விதர்ப்ப அரசனும் சம்மதம் தெரிவித்தான். அப்போது உலோபமுத்திரை, அகத்தியரே! தாங்கள் என்னை மணம் முடிக்க வேண்டிய அவசியத்தை நான் தெரிந்து கொள்ளலாமா? என்றாள். லோபா! என் முன்னோர்கள் ஆண் குழந்தை இன்மையால், இறந்தும் திதி செய்ய நாதியின்றி தவிக்கின்றனர். அவர்களால் சுவர்க்கத்தை அடைய முடியவில்லை. நானும் துறவியாகி விட்டதால், அவர்களின் நிலைமை மோசமாகி விட்டது. அவர்களின் ஆத்ம சாந்திக்காக, நான் திருமணம் முடிக்க வேண்டியுள்ளது. பிதுர் தர்ப்பணம் செய்யாதவன் நரகை அடைவான் என்பதை நீ அறிவாய். அவர்களின் விருப்பப்படி, நான் இல்லறத்தில் ஈடுபட்டு, ஒரு மகனை பெற்று, அவன் மூலமாக தர்ப்பணம் செய்ய வேண்டும். அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றா விட்டால், நான் நரகத்தை அடைவேன் என சாபமும் இட்டுள்ளனர், என்றார். இதைக் கேட்ட விதர்ப்ப மன்னன்,அகத்தியரே! உமக்கு எம் மகளை தருவதற்கில்லை. அப்படி தர வேண்டுமானால், நான் உமக்கு சீதனம் தரமாட்டேன். நீரே நான் கேட்கும் பொருளை எனக்குத் தர வேண்டும், என சொல்லி விட்டான். இதென்ன சோதனை? துறவியிடம் ஏது செல்வம்? இந்த மன்னன் கேட்கும் தொகைக்கு எங்கு போவேன்? என எண்ணிக்கொண்டிருந்த போது, லோபமுத்திரையும், அகத்தியரே! என்ன யோசனை? இப்பூவுலகில் இனிய இல்லறம் நடத்த பொன்னும் பொருளும் தேவை என்பதை நீர் அறிய மாட்டீரா? எனவே மிகப்பெரிய மாளிகை கட்டும் அளவுக்கு இடமும், அதை நிரப்புமளவுக்கு செல்வமும் கொண்டு வந்து என்னை மணம் முடித்துக் கொள்ளும். இல்லாவிட்டால், நீர் நரகம்செல் வதைத் தவிர வேறு வழியில்லை என்பதைப் புரிந்து கொள்ளும், என்றார். ஒரு பெண் தன்னை மணம் முடிக்க சம்மதித்ததே பெரிய விஷயம் என்ற முறையில், அகத்தியர் பலநாட்டு மன்னர்களையும் சந்தித்தார். அவர்களிடம் பொருளை யாசித்து பெற்றார். லோபமுத்திரை கேட்ட அளவுக்கு பொன்னும், பொருளும் கிடைத்தது. அதை அவளிடம் தந்து அவளைத் திருமணம் செய்து ஒரு மகனைப் பெற்றார். முன்னோர்கள் சாபம் நீங்கி அவரை வாழ்த்தினர். தன் மனைவி லோபமுத்திரையிடம், அடங்காமல் பிரவாகம் எடுத்த நதிபோல், என்னை ஆட்டி வைத்தவளே! இனி, நீ எனக்கு அடங்கி நடக்க வேண்டும். எந்தச் செல்வம் உனக்கு அவசியப்பட்டதோ, அந்தச் செல்வம் உலகம் முழுமைக்கும் கிடைக்க வேண்டும். சிவபெருமான் என்னை தென்னகம் சென்று பூமியை சமப்படுத்தச் சொன்னதன் தாத்பர்யம் உனக்குத் தெரியுமா? இந்த உலகத்தை அவரது பாதத்தால் ஓர் அழுத்து அழுத்தினால், அது சரியாகி விடும்.ஏனெனில், இந்த பூமி அவருக்கே சொந்தமானது. ஆனால், உலகிலுள்ள உயிர்கள் சமநிலை பெற வேண்டும் என்ற நோக்கத்திலேயே அவர் என்னை அனுப்பி வைத்தார். உலகம் செழிக்க தண்ணீர் தேவை. தண்ணீர் இருந்தால், உலகத்தின் எல்லாப்பகுதியும் தானாக செழித்து விடும். பயிர் பச்சைகள் வளரும். லோபா! நீ என் கமண்டலத்துக்குள் வந்து விடு, எனச்சொல்லி அவர் மீது தீர்த்தம் தெளித்தார். அவள் தண்ணீராக உருமாறி, கமண்டலத்தில் புகுந்தாள். அந்த கமண்டலத்துடன் அவர் குடகுமலையை அடைந்தார். மலையின் ஓரிடத்தில் தன் கமண்டலத்தை வைத்து விட்டு லிங்கபூஜை செய்து கொண்டிருந்தார். அப்போது, ஒரு காகம் பறந்து வந்தது. கமண்டலத்தை தட்டி விட்டது. கமண்டலம் சரியவே, உள்ளிருந்த தண்ணீர் ஆறாய்பிரவாகம் எடுத்தது. பெரிய நீர்வீழ்ச்சியாய் அது கொட்டியது. இதை எதிர்பாராத அகத்தியர் கமண்டலத்தில் கொட்டியது போக மீதி தண்ணீரை மீண்டும் பத்திரப் படுத்திக் கொண்டார். பிரவாகம்எடுத்த நதி கடல் போல் பெருகியதால் சிவசமுத்திரம் என சிவனின் பெயரால் அதை அழைத்தார். அது கா என்னும் சோலைகளுக்குள் விரிந்து பரவிச் சென்றதால், காவிரி என்று பெயர் வைத்தார். பின்னர், மீதி தண்ணீருடன் பொதிகை மலைக்கு வந்த அவர், லோபா! நீ நிரந்தரமானவள். என் முன்னோரின் சாபம் தீர்த்த நீ, குடகில் நதியாய் பிராவகம் எடுத்தது போல், இந்த பொதிகையிலும் நதியாகி உலகை செழிப்பாக்கு. செழிப் புள்ள உலகத்தில் வறியவர் இருக்கமாட்டார்கள். வறியவர்இல்லாத பூமியில் சமத்துவமான வாழ்வு கிடைக்கும், என்று கூறி, கமண்டலத்தில் இருந்த மீதி நீரை, பொதிகையின் உச்சத்தில் இருந்த சிகரத்தில் கொட்டினார். அது பளபளவென மின்னியபடியே பாணம் போல வேகமாகப் பாய்ந்து ஒரு அருவியை உருவாக்கியது. அதற்கு பாண தீர்த்தம் என பெயர் வைத்தார். அந்த அருவி ஓரிடத்தில் தேங்கி, நதியாகப் பாய்ந்தது. அப்போது, ஓரிடத்தில் சிவபார்வதி தரிசனம் கிடைத்தது. அதைக் கண்ட லாபமுத்திரை ஆனந்தமயமாகி மற் றொரு அருவியாய் வீழ்ந்தாள். அதற்கு கல்யாண தீர்த்தம் என பெயர் சூட்டினார் அகத்தியர். மீண்டும் ஓரிடத்தில் பக்தர்கள் நீராடி மகிழ ஒரு நீர்வீழ்ச்சியாய் மாறி, தன் கணவரின் பெயரால் அகத்தியர் தீர்த்தம் என்றே அழைக்கப்பட வேண்டும் என்ற தன் விருப்பத்தை தெரிவித்தாள். இன்றும் அதில் பக்தர்கள் நீராடி மகிழ்கின்றனர். தாமிரபரணி என்னும் பெயர் பெற்று அப்பகுதியை வளப்படுத்தினாள். பின்னர் அகத்தியர் பொதிகையில் தங்கி தமிழுக்கு இலக்கணம் வகுத்தார். உலகை சமநிலையாக்கிய மகிழ்ச்சியில் அங்கிருந்து மலைப்பாதையில் திருவனந்தபுரத்தை அடைந்தார். அங்கே அவர் சமாதி நிலையடைந்தார். Share  guru

நியூமராலஜி

நியுமரலாஜி (எண் கணிதம்) பிறந்த தேதி, பெயர் பலன்கள் ஒரு குழந்தை அல்லது பெரியவர் யாராக இருந்தாலும் அவர்களுக்கு அவர்கள் பிறந்த தேதிக்கான பலன்கள், அவர்கள் பெயருக்கான பலன்கள், இன்னும் கொஞ்சம் ஆழமாக பெயரின் முதல் எழுத்துக்கான பலன்கள், அவர்களுக்கான நிறம், உடல் அமைப்பு, நோய்கள் என்பதாக நிறைய விஷயங்களை பார்க்கலாம் ஆனால் இவை எல்லாவற்றிற்கும் நீங்கள் நான் தரவிறக்க கொடுக்கும் இரண்டு பிடிஎப் பைல்களையும் அவசியம் தரவிறக்கி கொஞ்சம் பொறுமையாக படிக்க வேண்டும் நீங்கள் விரும்பும் தகவல்களை எளிதாக பெற முடிகிற வகையில் ஒவ்வொரு தலைப்பிற்கும் ஒவ்வொரு பிறந்த தேதிக்கும் என வரிசையாக புக்மார்க் செய்து கொடுத்திருக்கிறேன் தகவல்கள் இனையத்தில் இருந்து எடுக்கபட்டவை தான். நீங்கள் இனையத்திலேயே சில தகவல்களை படிக்க விரும்பினால் Dinakarn Numerology அல்லது Tamil Kalanjiyam Numerology இந்த இரண்டு தளங்களில் ஒன்றில் படிக்கலாம் இரண்டு தளங்களும் ஒரே தகவலைத்தான் கொண்டிருக்கின்றன இதில் யார் யாரிடம் காப்பி எடுத்தது என்பது அவர்களுக்கு மட்டுமே தெரிந்த உண்மை. நான் கொடுக்கபோகும் இரண்டு பிடிஎப் புத்தகங்களும் நியுமரலாஜி (எண் கணிதம்) புத்தகம் என்றாலும் இரண்டிலும் வித்யாசம் இருக்கும் ஆகையால் இரண்டையும் நீங்கள் தரவிறக்கினால் மட்டுமே நியுமரலாஜி (எண் கணிதம்) என்றால் என்ன என்பதை தெரிந்துகொண்டு உங்களால் படித்து புரிந்துகொள்ள முடியும் எனவே தேவைப்படுபவர்கள் தரவிறக்கி வைத்துக்கொள்ளவும். முதலாவதாக முதலாவதாக Birth Date Horoscope Tamil இதில் உள்ள தகவல்கள் யாவும் மேலே உள்ள Dinakarn, Tamil Kalanjiyam இரண்டிலும் எடுத்து தொகுத்த்து தான் ஆனால் அதனோடு மேலும் சில அடிப்படை தகவல்களை இனையத்தில் இருந்து எடுத்து தொகுத்திருக்கிறேன். இரண்டாவதாக Numerology En Jothidam En kanitham இந்த தொகுப்பும் எளிமையாக புரிந்துகொண்டு படிப்பதற்கு வசதியாக புக்மார்க் வசதியும் இருக்கிறது. பதிவின் நீளத்தை கருத்தில் கொண்டும் மேலும் பகிர வேண்டிய விஷயங்கள் மொத்தமும் பிடிஎப்பில் தொகுத்து இருப்பதாலும் இந்த பதிவை நிறைவு செய்கிறேன் நேரம் கிடைத்தால் அடுத்ததாக வாஸ்து சாஸ்திரம் பற்றியதான ஒரு பதிவை எழுதி ஜோதிடம் குறித்து நம் தளத்தில் வரும் பதிவுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கிறேன். மேலும் சில ஜோதிட பதிவுகள்: பிறந்த குழந்தைகளுக்கான நட்சத்திரம், ராசி,பெயருக்கான முதல் எழுத்து ஜாதகம் , திருமண பொருத்தம், வருட பலன் கைரேகை ஜோதிடம் ஒரு பார்வை என்ன நண்பர்களே படிச்சிங்களா இது உங்களுக்கு உதவியாக இருக்குமென்று நம்புகிறேன் மேலும் இது பற்றியாதான சந்தேகங்கள் எதுவும் என்னிடம் கேட்க வேண்டாம் நான் ஜோதிடன் அல்ல, உங்களுக்கு தெரிந்து இதில் தவறு இருப்பாதாக நினைத்தால் தவறை சுட்டிக்காட்டி உதவும் அது மற்றவர்களுக்கும் உதவும். குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள். மேலும் படிக்க: நியுமரலாஜி (எண் கணிதம்) பிறந்த தேதி, பெயர் பலன்கள் ~ புரியாத கிறுக்கல்கள் http://gsr-gentle.blogspot.com/2011/10/tamil-numerology-birth-date-horoscope.html#ixzz2Hx7ff1n7 ஜிஎஸ்ஆர்

பலமாகத் தட்டுபவன்தான், கதவு திறந்தே இருப்பதை அறிவான்!’ ரவந்திரநாத் தாகூர்!.

பலமாகத் தட்டுபவன்தான், கதவு திறந்தே இருப்பதை அறிவான்!’ ரவந்திரநாத் தாகூர்!. சொன்னார். உலகிலேயே மிகச் சிறந்த கல்விக்கூடத்தினை உருவாக்கவேண்டும் என்ற தாகூரின் ஆசை 60-வது வயதில் நிறைவேறியது. ‘விசுவபாரதி’ என்ற உலகப் பல்கைலக்கழகத்தை சாந்திநிகேதனத்தில் உருவாக்கி, நோபல் பரிசுடன் கிடைத்த பணம்(???), தனது சொத்துகள் (???) மற்றும் புத்தக உரிமைகைளயும் இந்தப் பல்கைலக் கழகத்துக்கே எழுதி வைத்தார்.... மூலம் : http://edu.tamilclone.comtt 1901-ம் வருடம், சாந்திநிகேதனில் ஓர் ஆசிரமப் பள்ளியை நிறுவி, அங்கேயே தங்கினார். அங்கு மாணவர்களுக்குத் தாய்மொழியில் படிப்பு கற்பிக்கப்பட்டதுடன் தோட்டவேலை, உடற்பயிற்சி, சமூகசேவை, விளையாட்டு என அத்தனை கலைகளும் கற்பிக்கப்பட்டன.... மூலம் : http://edu.tamilclone.com ரவந்திரநாத் தாகூர் எழுதிய ‘கீதாஞ்சலி’ கவிதை நூலுக்கு, 1913- ம் ஆண்டு உலகின் மிக உயரிய இலக்கியத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. கொல்கத்தாவுக்கு அருகே சாந்திநிகேதன் கல்விக்கூடத்தில் தங்கியிருந்த கவிஞரைப் பாராட்டுவதற்காக நாட்டின் பல பாகங்களில் இருந்தும் மக்கள் கூட்டம் கூட்டமாகக் குவிந்தார்கள். ஆயிரமாயிரம் பேர் பாராட்டினாலும் மற்றொருபுறம் வயிறு எரியும் இலக்கியவாதிகளும் இருக்கத்தான் செய்தார்கள்... ‘ஆங்கிலத்தில் ‘கீதாஞ்சலி’ மொழிபெயர்க்கப்படாமல் இருந்தால், பரிசு கிடைத்திருக்குமா? இந்த விருது ஆங்கிலேயர்கள் வாங்கிக் கொடுத்ததா?’’ என்பன போன்ற விமர்சனங்கள் எழுந்தன. உடனே ஆவேசமடைந்த தாகூர், ‘‘நம் நாட்டில் என் கவிதை போற்றப்படவில்லை. அதனால், உலக அளவில் வெற்றிபெற விரும்பியே ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தேன். வெற்றிக்கான வாய்ப்புகள் கொட்டிக் கிடந்தாலும், பலர் அதனை அறிவதே இல்லை. ‘பலமாகத் தட்டுபவன்தான், கதவு திறந்தே இருப்பதை அறிவான்’ ’’ என்று பதில் கொடுத்தார்.... கொல்கத்தாவில், 1861-ம் வருடம், ஒரு பணக்காரக் குடும்பத்தில் 14-வது கடைசி குழந்தையாகப் பிறந்தார் ரவந்திரநாத் தாகூர். வீட்டிலேயே அறிவியல், கணிதம்,வரலாறு, பூகோளம், வடமொழி, வங்காளம், ஆங்கிலம், இசை, ஓவியம், உடற்பயிற்சி என எல்லா கலைகளையும் கற்கத் தொடங்கி, ஏழாவது வயதிலேயே கவிதை புனையவும் தொடங்கினார். 1877-ம் ஆண்டு வெளியான தாகூரின் முதல் நாடகத் தொகுதியில், வங்காள மொழியின் முதல் சிறுகதையும் இடம் பெற்றது. வழக்கறிஞர் பட்டம் பெறுவதற்காக இங்கிலாந்து சென்ற தாகூர், அந்தப் படிப்பு பிடிக்காமல் இரண்டே வருடத்தில் இந்தியா திரும்பினார். 22-வது வயதில் திருமணம் முடிந்ததும் குடும்ப நிர்வாகத்தைக் கையில் எடுத்துக்கொண்டார்.... ... 1901-ம் வருடம், சாந்திநிகேதனில் ஓர் ஆசிரமப் பள்ளியை நிறுவி, அங்கேயே தங்கினார். அங்கு மாணவர்களுக்குத் தாய்மொழியில் படிப்பு கற்பிக்கப்பட்டதுடன் தோட்டவேலை, உடற்பயிற்சி, சமூகசேவை, விளையாட்டு என அத்தனை கலைகளும் கற்பிக்கப்பட்டன.... சுதந்திரப் போராட்டத்தில் நேரடியாக இறங்காமல் இருந்த தாகூர், ஆங்கிலேயர்கள் வங்கத்தினை இரண்டாகப் பிரிக்க முயன்றபோது, தலைமையேற்று போராட்டத்தில் குதித்தார். ஆனால், காங்கிரஸ் கட்சியில் மிதவாதம், தீவிரவாதம் எனப் பிரிவினைகள் தோன்றியது மட்டுமின்றி முஸ்லிம், இந்துக்கள் பிரச்னகளும் தலைதூக்கவே நேரடி அரசியலில் இருந்து வெளியேறினார். பல்வேறு நாடுகளுக்கு இலக்கியப் பயணம் மேற்கொண்ட நேரத்தில்தான், கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.... ‘கீதாஞ்சலி’க்கு நோபல் பரிசு கிடைத்ததும், ஆங்கில அரசும் ‘சர்’ பட்டம் கொடுத்துக் கெள‌ரவித்தது. ஆனால், 1919-ம் ஆண்டில் நடந்த ‘ஜாலியன் வாலாபாக் படுகொலையால் அதிர்ச்சியடைந்த தாகூர், உடனே ஆங்கில அரசின் பட்டத்தைத் தூக்கி எறிந்து, தான் ஆங்கிலேயரின் விசுவாசி அல்ல என்பதை வெளிப்படுத்தினார். காந்தியடிகளுடன் நட்போடு இருந்தாலும், கைராட்டையின் மூலம் சுதந்திரம் பெறுவதை விரும்பாமல், ‘பலமாகத் தட்டுபவன்தான், கதவு திறந்தே இருப்பதை அறிவான்!’ என்று உரக்கச்சொன்னார். உலகிலேயே மிகச் சிறந்த கல்விக்கூடத்தினை உருவாக்கவேண்டும் என்ற தாகூரின் ஆசை 60-வது வயதில் நிறைவேறியது. ‘விசுவபாரதி’ என்ற உலகப் பல்கைலக்கழகத்தை சாந்திநிகேதனத்தில் உருவாக்கி, நோபல் பரிசுடன் கிடைத்த பணம்(???), தனது சொத்துகள் (???) மற்றும் புத்தக உரிமைகைளயும் இந்தப் பல்கைலக் கழகத்துக்கே எழுதி வைத்தார்.... சொன்னார். உலகிலேயே மிகச் சிறந்த கல்விக்கூடத்தினை உருவாக்கவேண்டும் என்ற தாகூரின் ஆசை 60-வது வயதில் நிறைவேறியது. ‘விசுவபாரதி’ என்ற உலகப் பல்கைலக்கழகத்தை சாந்திநிகேதனத்தில் உருவாக்கி, நோபல் பரிசுடன் கிடைத்த பணம்(???), தனது சொத்துகள் (???) மற்றும் புத்தக உரிமைகைளயும் இந்தப் பல்கைலக் கழகத்துக்கே எழுதி வைத்தார்.... மூலம் : http://edu.tamilclone.comttt சொன்னார். உலகிலேயே மிகச் சிறந்த கல்விக்கூடத்தினை உருவாக்கவேண்டும் என்ற தாகூரின் ஆசை 60-வது வயதில் நிறைவேறியது. ‘விசுவபாரதி’ என்ற உலகப் பல்கைலக்கழகத்தை சாந்திநிகேதனத்தில் உருவாக்கி, நோபல் பரிசுடன் கிடைத்த பணம்(???), தனது சொத்துகள் (???) மற்றும் புத்தக உரிமைகைளயும் இந்தப் பல்கைலக் கழகத்துக்கே எழுதி வைத்தார்.... மூலம் : http://edu.tamilclone.comt ஒரு கவிதையில், ‘மரணம் வந்து கதவைத் தட்டும் நாளில் நீ என்ன செய்வாய்?’ என்று கேள்வி கேட்டு, ‘வந்த என் விருந்தாளியின் முன்னே தட்டு நிறைய என் வாழ்க்கையைப் பரிமாறுவேன். வெறும் கையுடன் திரும்பவிடவே மாட்டேன்’ என்று பதிலும் சொல்லியிருப்பார் தாகூர். அப்படியே அவரது 80-வது வயதில் ஒரு கவிதையைச் சொல்லி முடித்து, கண் மூடிய ஒரு மணி நேரத்தில் அமைதியாக மரணத்தைத் தழுவினார்....

அடிபட்ட பாம்பு மீண்டும் வந்து பழி வாங்குமா

அடிபட்ட பாம்பு மீண்டும் வந்து பழிவாங்குமா? பாம்பு வழிபாடு ஆறு சமயங்களுடன் தொடர்புடையது. பாம்பு கணபதியின் இடுப்பு கச்சையாகவும், ஆயுதமாகவும் விளங்குகிறது. சிவனை அணிகலனாக அலங்கரிப்பது பாம்பு. பாம்பானது விஷ்ணு நடந்தால் குடையாகிறது, இருந்தால் ஆசனமாகிறது, படுத்தால் பாயாகிறது. பாம்பை சக்தியின் வடிவமாகக் கருதுவர். பெண் தெய்வங்களுக்கு குடை பிடிப்பது பாம்புதான். முருக வழிபாட்டிற்கும், அரசமரத்தடி பாம்புக்கல் வழிபாட்டிற்குமிடையில் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. மக்கள் பாம்பைக் கண்டும், அது உறையும் புற்றைக் கண்டும் அஞ்சினர். பாம்பு தீண்டினால், அதன் நஞ்சை முறிக்கும் மருத்துவ சக்தி மிகப் பழங்கால மக்களுக்கு இல்லை. இறுதியில், பாம்பைக் கட்டுப்படுத்த தெய்வசக்தியை முழுவதும் நம்பினர். பாம்பு வழிபாடுகளில் அச்சம் பக்தியாக மலர்ந்தது. பாம்பின் தலைவனான நாகராஜனை தெய்வமாக்கி வழிபட்டனர். பாம்புகள் பற்றிய தகவல்கள்: பாம்புகள் கடித்து இறப்பவர்களை விட, பயத்தால் இறப்பவர்களின் எண்ணிக்கை தான் அதிகம் என பாளை.,யில் நடந்த கருத்தரங்கில் நேதாஜி ஸ்நேக் டிரஸ்ட் தலைவர் ரமேஷ் தெரிவித்தார். பாளை.,யில் விஷப் பாம்புகளை கண்டறிவது எப்படி என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது. கருத்தரங்கில் உசிலம்பட்டி ஸ்நேக் டிரஸ்ட் தலைவர் ரமேஷ் பாம்புகளை கையில் ஏந்தி, அதன் குணாதிசயங்கள், மக்கள் மத்தியில் பாம்பு பற்றிய தவறான தகவல்கள், மாணவர்களின் சந்தேகங்களுக்கு விளக்கமளித்து பேசியதாவது; பாம்பு விஷமுள்ளது, விஷமற்ற என இரண்டு விதமாக உள்ளது. பாம்பில் விஷமுள்ளவைகளின் கருவிழிகள் நீளமாக இருப்பதோடு, செதில் சிறியதாகவும், தலை முக்கோண வடிவில் பெரிதாக இருக்கும். விஷமற்ற பாம்புகள் இதிலிருந்து வேறுபட்டிருக்கும். பாம்பு பெரும்பாலும் மனிதர்களை கடிக்காது. நாம் அதை மிதித்தாலோ அல்லது ஆபத்து நேரத்திலோ அல்லது உணவுக்காக கடிக்கும் பழக்கம் கொண்டுள்ளது. பாம்பு நம் அருகில் செல்லும் போது அசையாமல் இருந்தால் கடிக்காது. பாம்பு கடிக்கும் பட்சத்தில் பதட்டப்படாமல், முதலுதவி சிகிச்சை செய்ய வேண்டும். பாம்பு கடித்து இறப்பவர்களை விட, பாம்பு கடித்த பயத்தில் இறப்பவர்கள் தான் அதிகம். பாம்பு கடித்தவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்க வேண்டும். மனிதனில் எந்த உடல் உறுப்பில் கடித்ததோ அந்த பகுதியில் கயிறு அல்லது ரப்பர் டியூப் மூலம் தளர்வாக கட்ட வேண்டும். கடிபட்ட பகுதியில் சுத்தாமான நீரை கொண்டு உப்பு சோப்பு மூலம் கழுவலாம். கடித்த பாம்பு எது என்பதை தெரிந்தால் ஆஸ்பத்திரியில் விரைவாக சிகிச்சை பெற முடியும். பாம்பு இனத்தில் பச்சபாம்பு, மண்ணுளி பாம்பு, இருதலைபாம்பு போன்றவை மட்டுமே குட்டி ஈன்று எடுக்கும். மற்ற பாம்புகள் அனைத்தும் முட்டையிட்டு குஞ்சு பொறிக்கும் வகையை சேர்ந்ததாகும். பாம்பு பிறக்கும் போதே பல்லோடு பிறப்பதால், பிறந்த சில மணி நேரத்திலேயே வேட்டையாடும் குணம் அதற்கு தானாக உருவாகிறது. பாம்பின் விஷத்தில் 75 சதவீத புரோட்டீனும், 25 சதவீதம் விஷ தன்மை கொண்ட எண்சைம்களும் உள்ளன. பாம்பின் விஷத்தில் இருந்து பாம்பு கடிக்கான மருந்து தயாரிக்கப்படுகிறது. சுமார் 25 விஷ பாம்புகளில் இருந்து ஒரு மில்லி கிராம் விஷம் மட்டுமே எடுக்க முடியும் என்பதால், அதன் விலை அதிகமாகும். பாம்பிற்கு 3 அறிவு மட்டுமே உள்ளதால், பாம்பிற்கு நினைவு சக்தி கிடையாது. ஒரு சில பாம்புகள் முட்டை சாப்பிடுகின்றன. எந்த பாம்பும் பால் சாப்பிடுவதில்லை. பாம்பு கடித்து சாப்பிடக்கூடிய பொருட்கள் மட்டுமே செரிக்கிறது. பாலின் அடர்த்தி அதிகம் என்பதால் செரிக்காமல் பாம்பு இறந்து விடும். உலகில் 2 தலை பாம்பு உள்ளதே தவிர 5 தலை பாம்பு கிடையாது. ஒரு சில பாம்பிடம் நாகரத்தினம் இருப்பதாக கூறுவது மூட நம்பிக்கையாகும். நாகரத்தினம் இயற்கையாக கிடைக்கும் பொருளாகும். வனப்பகுதியில் வசிக்கும் விலங்குகளிடையே சண்டை ஏற்படுவது இயற்கையாகும். அதுபோல் பாம்பு-கிரி சண்டையும் இயற்கையானத தவிர, பரம்பரை எதிரிகள் கிடையாது. பிடிபட்ட பாம்பை கொல்லாமல் விட்டால், மீண்டும் வந்து கடிக்கும் என்பது மூட நம்பிக்கையாகும். பாம்புக்கு 3 அறிவு மட்டுமே உள்ளதால் ஞாபசக்தி கிடையாது. பாம்பு மனிதனிடமிருந்து வெளியேறும் வியர்வை நாற்றத்தின் மூலம் பழகும். ஆண் பாம்பு தலை முதல் வால் வரை ஒரே மாதிரியான தோற்றத்தில் இருக்கும். பெண் பாம்பிற்கு வால் பகுதியில் சிறிய மாற்றம் இருக்கும். பாம்பு முட்புதர், மறைவிடங்கள், கற்குவியல், மரக்கட்டைகள் உள்ள பகுதிகளில் தங்குகிறது. திடீரென வழிதவறி வீட்டிற்குள் பாம்பு புகுந்தால் வெள்ளப் பூண்டு, வெங்காயம் போன்றவற்றை அரைத்து தண்ணீரில் கலந்து தெளித்தால் பாம்பு வீட்டில் இருந்து வெளியேறிவிடும். பாம்பு கடிக்கு விஷக்கடி மருந்து பலன் அளிக்காது. மாறாக அ பாம்பு கடிக்கு "ஏ.எஸ்.வி., என்ற மருந்தை உடலில் செலுத்தினால் மட்டுமே பயன் கிடைக்கும். எனவே மாணவர்கள், பொதுமக்கள் பாம்பு பற்றிய மூட நம்பிக்கைகளை கைவிட வேண்டும். இவ்வாறு ஸ்நேக் ரமேஷ் தெரிவித்தார். பொதுவாக ஒருவரது கனவில் வரும் பாம்பு அவரைத் துரத்துவது போல் கண்டால் அந்த நபருக்கு மிகுந்த சிரமம் ஏற்படும். ஏதாவது ஒரு பிரச்சனை வரும் என்றும், அதே பாம்பு அவரை கனவில் கொத்தி விட்டாலோ அல்லது அவரைத் துரத்தாமல் சாதுவாகச் சென்று விட்டாலோ பிரச்சனை இல்லை என்றும் கூறுகின்றனர்.

தொட்டுவிடு ‘ஷாக்’ அடிக்கட்டும்

தொட்டுவிடு ‘ஷாக்’ அடிக்கட்டும் மிட்டாய், வாழ்க்கை | 4 மறுமொழிகள் » எங்கும் ஒரே பேச்சு இல்லையில்லை, எங்கெங்கும் ஒரே ஏச்சு. கடந்த ஆட்சி துண்டாய் போனது மின்வெட்டினால் தான் எச்சரிக்கிறார்களாம் சிலர். நடக்கும் ஆட்சி துண்டாய் போனாலும் மின்வெட்டு எஞ்சியிருக்கும் அறியாதவர்களா இவர்கள். காற்றாலை சுற்றவில்லை அணைகளில் நீரில்லை அனல் நிலக்கரி தரமில்லை அண்டை மாநிலங்கள் ஒத்துழைப்பதும் இல்லை ஒன்றா இரண்டா காரணங்கள் ஏராளம். ஆனாலும், மின்சாரம் இல்லை. பேசுவது எதிர்க்கட்சியா ஆளும் கட்சி செயல்படவில்லை. பேசுவது ஆளும் கட்சியா ஆண்ட கட்சி செயல்படுத்தவில்லை. காட்சியும், கட்சிகளும் மாறினாலும் காரணங்கள் மாறாது. எந்தக் கட்சி ஆண்டாலும் எந்திரம் ஓடாது. மின்வெட்டுக்கு மட்டும் வெட்டே இருக்காது. வியர்வையில் மின்சாரம் தயாரிக்கலாமா மைக்கேல் ஃபாரடே வோ தாமஸ் எடிசனோ புதிதாய் வரவேண்டும். சாலைகளில், சந்திகளில் கண்கள் கொள்ளக் கூசும் வெளிச்சத்தில் குளித்த விளம்பரங்கள், விளம்பரங்கள். குடிசை வீடுகளில் கண்களை இடுக்கி திரிவிளக்கில் பாடங்களை மேயும் தேர்வுநேர மாணவர்கள். ஓலை விசிரி கைவலிக்கும் விசிராவிட்டால் தூக்கம் சிரிக்கும் உறக்கமாவது வந்துவிடக் கூடாதா? படுக்கையிலும் போராட்டம் விசிரிகள் கைதட்டும் பறந்துவிட்டதா பந்து போதை எழும்பிப்பார்த்து கொண்டாடும் மின்னொளியிலும் கிரிக்கெட். மின்சாரம் பற்றாக்குறை தினமும் வெட்டு 3 மணி நேரம் திட்டம் போடும் அரசு மின்சாரம் பற்றாக்குறை விளம்பர ஆடம்பரங்களுக்கு இனி வெட்டு சட்டம் போடுமா அரசு. சொந்த விவசாயிகள் விதைத்ததை எடுக்க நீரிறைக்க மின்சாரமில்லை அன்னிய கோலாக்கள் புட்டிகளை நிறைக்க எப்போதும் தடையில்லை நீண்ட கடற்கரை நாடு அலைகளிலிருந்து மின்சாரம் யோசிக்கவே கூடாது. எப்போதும் வெயில்காயும் நாடு பரிதிஒளியில் மின்சாரம் ஆராயவே கூடாது வல்லரசு காணும் நாடல்லவா அணுவை திருத்தி அடிமையாவதை மட்டுமே யோசித்து ஆராய்வோம். எதையும் விற்றே பழக்கப்பட்டு மின்வெட்டிலும் லாபம் ருசிக்க வருகிறார்கள் மின்கல முதலாளிகள். இனி உபரியாய் மின்சாரம் இருந்தாலும் லாபத்திற்கு உத்திரவாத ஒப்பமிட்டு மின்வெட்டை நம்மிடம் சாட்டும் அரசு. என்ன செய்யப் போகிறோம் நாம்? நினைத்தாலே ‘ஷாக்’ அடிக்கும் புரட்சிகர மின்சாரம் என்னவென்று காட்டவேண்டாமா?

ஷேக்ஸ்பியரின் ஈரேழ் வரிப் பாக்கள்

ஷேக்ஸ்பியரின் ஈரேழ் வரிப் பாக்கள் ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets) எழில் இனப் பெருக்கம் மூலம் : வில்லியம் ஷேக்ஸ்பியர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா முன்னுரை: நாடக மேதை வில்லியம் ஷேக்ஸ்பியர் 154 ஈரேழ்வரிப் பாக்கள் எழுதியிருப்பதாகத் தெரிறது. 1609 ஆம் ஆண்டிலே ஷேக்ஸ்பியரின் இலக்கிய மேன்மை அவரது நாடகங்கள் அரங்கேறிய குலோப் தியேட்டர் (Globe Theatre) மூலம் தெளிவாகி விட்டது. அந்த ஆண்டில்தான் அவரது ஈரேழ்வரிப் பாக்கள் தொகுப்பும் முதன்முதலில் வெளியிடப் பட்டது. ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் ஆங்கில மொழியில் வடிக்கப் பட்டுள்ள காதற் கவிதைகள். அவை வாலிபக் காதலருக்கு மட்டுமின்றி அனுபவம் பெற்ற முதிய காதலருக்கும் எழுதியுள்ள ஷேக்ஸ்பியரின் ஒரு முதன்மைப் படைப்பாகும். அந்தக் காலத்தில் ஈரேழ்வரிப் பாக்கள் பளிங்கு மனமுள்ள அழகிய பெண்டிர்களை முன்வைத்து எழுதுவது ஒரு நளின நாகரிகமாகக் கருதப் பட்டது. ஷேக்ஸ்பியரின் முதல் 17 பாக்கள் அவரது கவர்ச்சித் தோற்ற முடைய நண்பனைத் திருமணம் செய்ய வேண்டித் தூண்டப் பட்டவை. ஆனால் அந்தக் கவர்ச்சி நண்பன் தனக்குப் பொறாமை உண்டாக்க வேறொரு கவிஞருடன் தொடர்பு கொள்கிறான் என்று ஷேக்ஸ்பியரே மனம் கொதிக்கிறார். எழில் நண்பனை ஷேக்ஸ்பியரின் ஆசை நாயகியே மோகித்து மயக்கி விட்டதாகவும் எண்ணி வருந்துகிறார்.. ஆனால் அந்த ஆசை நாயகி பளிங்கு மனம் படைத்தவள் இல்லை. அவளை ஷேக்ஸ்பியர் தன் 137 ஆம் ஈரேழ்வரிப் பாவில் “மனிதர் யாவரும் சவாரி செய்யும் ஒரு வளைகுடா” (The Bay where all men ride) – என்று எள்ளி இகழ்கிறார். அவரது 20 ஆவது ஈரேழ்வரிப் பாவின் மூலம் அந்தக் காதலர்கள் தமது ஐக்கிய சந்திப்பில் பாலுறவு கொள்ளவில்லை என்பதும் தெரிய வருகிறது. ஐயமின்றி ஷேக்ஸ்பியரின் ஈரேழு வரிப்பாக்கள் அக்கால மாதரின் கொடூரத்தனத்தையும், வஞ்சக உறவுகளைப் பற்றியும் உணர்ச்சி வசமோடு சில சமயத்தில் அவரது உடலுறவைப் பற்றியும் குறிப்பிடுகின்றன ! ஷேக்ஸ்பியரின் நாடக அரங்கேற்றமும் அவரது கவிதா மேன்மையாகவே எடுத்துக் கொள்ளப் படுகிறது. அவரது முதல் 126 ஈரேழ்வரிப் பாக்கள் தனது நண்பன் ஒருவனை முன்னிலைப் படுத்தி எழுதப் பட்டவையே. மீதியுள்ள 28 பாக்கள் ஏதோ ஒரு கருப்பு மாதை வைத்து எழுதப் பட்டதாக அறியப் படுகிறது. இறுதிப் பாக்கள் முக்கோண உறவுக் காதலர் பற்றிக் கூறுகின்றன என்பதை 144 ஆவது பாவின் மூலம் அறிகிறோம். ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்களில் சிறப்பாகக் கருதப்படுபவை : 18, 29, 116, 126 & 130 எண் கவிதைகள். ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் எந்த ஒரு சீரிய ஒழுங்கிலோ, நிகழ்ச்சிக் கோர்ப்பிலோ தொடர்ச்சி யாக எழுதப் பட்டவை அல்ல. எந்தக் கால இணைப்பை ஓட்டியும் இல்லாமல் இங்கொன்றும், அங்கொன்றுமாக அவை படைக்கப் பட்டவை. நிகழ்ந்த சிறு சம்பவங்கள் கூட ஆழமின்றிப் பொதுவாகத் தான் விளக்கப் படுகின்றன. காட்டும் அரங்க மேடையும் குறிப்பிட்டதாக இல்லை. ஷேக்ஸ்பியர் தனது நண்பனைப் பற்றியும் அவனது காதலியின் உறவைப் பற்றியும் எழுதிய பாக்களே நான் தமிழாக்கப் போகும் முதல் 17 ஈரேழ்வரிப் பாக்கள். இவற்றின் ஊடே மட்டும் ஏதோ ஒருவிதச் சங்கிலித் தொடர்பு இருப்பதாகக் காணப் படுகிறது. ஷேக்ஸ்பியர் தனது பாக்களில் செல்வீக நண்பனைத் திருமணம் புரியச் சொல்லியும் அவனது அழகிய சந்ததியைப் பெருக்கி வாழ்வில் எழிலை நிரந்தரமாக்க வேண்டுமென்றும் வற்புறுத்துகிறார். ஆதலால் ஷேக்ஸ்பியரின் முதல் 17 ஈரேழ்வரிப் பாக்கள் “இனப் பெருக்கு வரிப் பாக்கள்” (Procreation Snnets) என்று பெயர் அளிக்கப் படுகின்றன. **************** உனக்குப் பகை நீதான் ! (ஈரேழ் வரிப்பா – 1) நளினப் பிறவிகள் மூலம் நாம் விழைவது எழில் இனப் பெருக்கம் ! அழகு ரோஜா ஒருபோதும் அழியாது காலப் போக்கில் பெறுபவர் மரிப்பினும் ! வாலிபச் சந்ததி விருத்தி செய்து நிலைத்திடும் நினைவுகள் பற்பல ஜென்மம் ! நீ அதைக் கட்டுப்பாடு செய்; ஆயினும் நின் தீபத் தீயிக்கு எண்ணை நீயே சுயமாய் நிரப்புவது ! நேர்ந்திடும் பஞ்சம் அதனால் சந்ததிக்கு பேரளவு செழிப்புள்ள போதும் ! உனக்கு நீ பகைவனாய் உள்ளாய் ! இனிய சுயநலம் மிகவும் கொடியது ! ஒளிமிகும் புது உலக ஆபரணம் நீ ! ஒற்றைத் தூதுவன் ! உன் வசந்த வனப்பு மங்கிப் போவது ! உனது மொட்டுக்குள் புதையும் உன் சுய திருப்தி எல்லாம் ! சேமிப்பை வீணாக் காமல் இன விருத்தியைத் தொடர் ! பரிவு கொள் இந்தப் புவி மீது பெருந்தீனி மானிடன் இன்றேல் உண்பான் புதை குழிபோல் உலகுக் குரிய வற்றை ! ++++++++++++++ (Shakespeare’s Sonnets : 1) From fairest creatures we desire increase, That thereby beauty’s rose might never die, But as the riper should by time decease, His tender heir might bear his memory: But thou, contracted to thine own bright eyes, Feed’st thy light’st flame with self-substantial fuel, Making a famine where abundance lies, Thyself thy foe, to thy sweet self too cruel. Thou that art now the world’s fresh ornament And only herald to the gaudy spring, Within thine own bud buriest thy content And, tender churl, makest waste in niggarding. Pity the world, or else this glutton be, To eat the world’s due, by the grave and thee. +++++++++++ Sonnet 1 Summary As the opening sonnet of the sequence, this one obviously has especial importance. It appears to look both before and after, into the future and the past. It sets the tone for the following group of so called ‘procreation’ sonnets 1-17. In addition, many of the compelling ideas of the later sonnets are first sketched out here – the youth’s beauty, his vulnerability in the face of time’s cruel processes, his potential for harm, to the world, and to himself, (perhaps also to his lovers), nature’s beauty, which is dull in comparison to his, the threat of disease and cankers, the folly of being miserly, the need to see the world in a larger sense than through one’s own restricted vision. ‘Fair youth, be not churlish, be not self-centred, but go forth and fill the world with images of yourself, with heirs to replace you. Because of your beauty you owe the world a recompense, which now you are devouring as if you were an enemy to yourself. Take pity on the world, and do not, in utter selfish miserliness, allow yourself to become a perverted and self destructive object who eats up his own posterity’. காலத்தை வீணாக்காதே ! (ஈரேழு வரிப்பா – 2) நாற்ப தாண்டு குளிர்காலத் தடங்கள் உன் புருவத்தைச் சூழும் போது அகண்ட கீறல்கள் அழகு மேனியில் தோண்டப் படும் ! இளமைப் பீடு உடை இன்று மினுப்பது கிழிந்த அணியாய்ச் சிறு மதிப் படையும் ! ஒப்பனை உனக்கு ஒளிந்துள தெங்கே ? காமக்களி நாட்களின் சேமிப்பு எங்கே ? குழிந்த உன் விழிகளுக்குள் தெரியும். அவமானம் விழுங்கும் நேர்மை உணர்வை புகழ்ச்சி அளிக்காது எந்த ஊதியமும் ! இதற்கு மேல் எத்தகைத் தகுதி பெறும் எழில் மேனியின் பயன் பாடு ? இந்த மகவு எனக் குரியதா வென்னும் வினாவுக்கு விடை தர முடிந்தால் எடை போடு எனது வாழ்வை ! எத்தனை மாதர்கள் எனக்கெனக் கணக்கிடு முதியவன் என்று நியாயம் அளித்திடு அழகுக்குச் சோதனை ! எழிலுக்கு வாரிசு ! புதிதாய் இவை படைப் பானவை ! உன்னுருவில் உதித்த மதலை உனக்கு முதிய வயதுச் சின்னம் ! கணப்பு உதிரம் மீண்டும் ஓடும் குளிர்காலம் ! ++++++++++++++ (Shakespeare’s Sonnets : 2) When forty winters shall besiege thy brow, And dig deep trenches in thy beauty’s field, Thy youth’s proud livery, so gazed on now, Will be a tatter’d weed, of small worth held: Then being ask’d where all thy beauty lies, Where all the treasure of thy lusty days, To say, within thine own deep-sunken eyes, Were an all-eating shame and thriftless praise. How much more praise deserved thy beauty’s use, If thou couldst answer ‘This fair child of mine Shall sum my count and make my old excuse,’ Proving his beauty by succession thine! This were to be new made when thou art old, And see thy blood warm when thou feel’st it cold. +++++++++++ Sonnet 2 Summary The poet looks ahead to the time when the youth will have aged, and uses this as an argument to urge him to waste no time, and to have a child who will replicate his father and preserve his beauty. The imagery of ageing used is that of siege warfare, forty winters being the besieging army, which digs trenches in the fields before the threatened city. The trenches correspond to the furrows and lines which will mark the young man’s forehead as he ages. He is urged not to throw away all his beauty by devoting himself to self-pleasure, but to have children, thus satisfying the world, and Nature, which will keep an account of what he does with his life. +++++++++++++++++ (ஈரேழ் வரிப்பா – 3) உன்னைப் பார் கண்ணாடியில் கண்ணாடியில் பார்த்து உன் முகத்திடம் சொல் இதுதான் தருணம் ! தேவை உனக்கு ஒரு சேய் ! உன்னைப் போலொரு சேயைத் தவிர்த்தால் உலகுக்குப் புறம்பாய் நடந்து வருவாய் சேயின் எதிர்காலத் தாய்க் கருவை விலக்குவாய் ! உன்சேய் விழையா ஒரு மாதே இல்லை சுய சுகத்தில் எவனும் சந்ததி நிறுத்தான் ! அன்னையின் கண்ணாடி நீ ! அதுபோல் நீயும் தன்னை இளங் குமரியாய்க் காண்பாள். உனது சேயைக் காணும் போது இளமை மீளும் வயதாகும் உனக்கு ! தனித்து செத்தால் அழியும் நின்னெழில் காட்சி ! +++++++++++++ Sonnets : 3 Look in thy glass, and tell the face thou viewest Now is the time that face should form another; Whose fresh repair if now thou not renewest, Thou dost beguile the world, unbless some mother. For where is she so fair whose unear’d womb Disdains the tillage of thy husbandry? Or who is he so fond will be the tomb Of his self-love, to stop posterity? Thou art thy mother’s glass, and she in thee Calls back the lovely April of her prime: So thou through windows of thine age shall see Despite of wrinkles this thy golden time. But if thou live, remember’d not to be, Die single, and thine image dies with thee. ++++++++++++ Sonnet 3 Summary The youth is urged once more to look to posterity and to bless the world by begetting children. No woman, however beautiful, would disdain to have him as a mate. Just as he reflects his mother’s beauty, showing how lovely she was in her prime, so a child of his would be a record of his own beauty. In his old age he could look on this child and see an image of what he once was. But if he chooses to remain single, everything will perish with him. ++++++++++++ (ஈரேழ் வரிப்பா – 4) ஏன் வீணாக வேண்டும் ? உன் பிறப்பெழில் ஏன் வீணாக வேண்டும் சுய இச்சை உனக்குள் அடங்கிப் போய் ? இயற்கை தரும்கடன் நேராக எதுவு மில்லை ! எதிர்பார்க்கும் நன்றி தன் இலவசக் கொடைக்கு ! தன்னலமி நீ ஏன் தவறிப் பிழைக்கிறாய் ? வாரிசாய் வந்த அழகைச் சந்ததிக்கு அளித்திடு ! கடன் பெற்றதைப் பயன் படுத்தல் முறையாம். சேமிப்பு பேரளவு ! ஆயினும் வாழாய் நீ ! கைச்சுகப் போக்கு தனிமையில் மட்டுமே ! உன்னை ஏமாற்றிக் கொள்வது நீயே ! என்ன பதிலோ இயற்கை செத்தபின் கேட்டால் ? ஏற்புடைச் சந்ததி எப்படி விட் டேகுவாய் ? சந்ததி படைக்கா சுந்தரம் புதைபடும் உன்னுடன் ! விந்தின் பயன் பெறின் பிறவிப் பலன் வாழ்வில் ! +++++++++++++ Sonnet : 4 Unthrifty loveliness, why dost thou spend Upon thy self thy beauty’s legacy? Nature’s bequest gives nothing, but doth lend, And being frank she lends to those are free: Then, beauteous niggard, why dost thou abuse The bounteous largess given thee to give? Profitless usurer, why dost thou use So great a sum of sums, yet canst not live? For having traffic with thy self alone, Thou of thy self thy sweet self dost deceive: Then how when nature calls thee to be gone, What acceptable audit canst thou leave? Thy unused beauty must be tombed with thee, Which, used, lives th’ executor to be. ++++++++++++ Sonnet 4 Summary The youth is urged once again not to throw away without regard the beauty which is his to perfection. It is Nature’s gift, but only given on condition that it is used to profit the world, that is, by handing it on to future generations. An analogy is drawn from money-lending: the usurer should use his money wisely. Yet the young man has dealings with himself alone, and cannot give a satisfactory account of time well spent. If he continues to behave in such a way, his beauty will die with him, whereas he could leave inheritors to benefit from his legacy. +++++++++++++ (ஈரேழ் வரிப்பா – 5) பருவத்தின் படைப்பு உன்னை மென்மையாய் வடித்தவை காலங்கள் கவர்ச்சி நோக்கில் ஒவ்வொரு விழியும் வசிக்கும் ! கடுமை யாளரும் அநத நோக்கில் விளையாடுவர் ! எழிலைச் சுளுவாய் மீறும் அழகீனப் பண்பு ஓய்விலாக் காலம் வேனில் நோக்கிச் செல்லும் ! வெறுக்கும் குளிர்காலம் முறிக்கும் வேனிற் பருவம் ! பனிப்படிவு நிறுத்தும் பசுமை இலைக் காட்சி ! எழில்மீது பனிபடரும் ! எங்கும் சூனியப் பொட்டல் ! ஆவியாகும் வேனில் மணம் தடைப்பட வேண்டும் கொதிவடித் திரவம் கண்ணாடிக் குவளை மிஞ்சும் 1 வனப்பின் விளைவு வனப்போ டிழந்து போகும் நினைவும் எழிலும் அழிவன எதுவெனத் தெரியா ! ஆயினும் குளிரால் உலரும் மலர்கள் சருகே ! தோற்றம் மறைந்திடும் ! உட்பொருள் இனிக்கும். +++++++++++++ Sonnet : 5 Those hours, that with gentle work did frame The lovely gaze where every eye doth dwell, Will play the tyrants to the very same And that unfair which fairly doth excel: For never-resting time leads summer on To hideous winter and confounds him there; Sap check’d with frost and lusty leaves quite gone, Beauty o’ersnow’d and bareness every where: Then, were not summer’s distillation left, A liquid prisoner pent in walls of glass, Beauty’s effect with beauty were bereft, Nor it nor no remembrance what it was: But flowers distill’d though they with winter meet, Leese but their show; their substance still lives sweet. ++++++++++++ Sonnet 5 Summary This and the following sonnet are written as a pair.The poet laments the progress of the years, which will play havoc with the young man’s beauty. Human life is like the seasons, spring, summer, autumn’s maturity and fruition, followed by hideous winter. Nothing is left of summer’s beauty except for that which the careful housewife preserves, the essence of roses and other flowers distilled for their perfume. Other than that there is no remembrance of things beautiful. But once distilled, the substance of beauty is always preserved. therefore the youth should consider how his beauty might be best distilled. +++++++++++++++++ (ஈரேழ் வரிப்பா – 6) பருவத்தின் பிள்ளைகள் முறிந்த குளிர் காலம் அழிக்க வேண்டாம் உனது வேனிற் பருவம் சேயாக்கும் முன்பு ! கர்ப்பிணி ஆக்கு ஒருத்தியை பொக்கிசம் ஓரிடத்தில் ! உன் அழகின் அமுது சேய், உன்விந்து வீணாகும் முன் பணத்தை உவந்து கடன்கொடு வருவாய் பெருக்க ! கடனாளி மகிழ்வான் விழையும் கடன் கிடைத்தால், உன்போல் மறு பிரதி பதிப்பது உனக்கது பரிசு ! பத்துச் சேய்கள் பிறந்தால் மெத்தக் களிப்புனக்கு ! ஈரைந்து சிசுக்கள் தங்கின் சந்ததி பெருகும் உன்போல் மரணம் என் செய்ய முடியும் நீயே மரித்தால் வருமரபில் உனை வாழ வைத்து விட்டு ? சுயத் தணிப்புச் சுகம் வேண்டாம், சுந்தரன் நீ மரணம் வென்றால் புழுக்கள் உனக்குச் சந்ததி ! +++++++++++++ Sonnet : 6 Then let not winter’s ragged hand deface In thee thy summer, ere thou be distill’d: Make sweet some vial; treasure thou some place With beauty’s treasure, ere it be self-kill’d. That use is not forbidden usury, Which happies those that pay the willing loan; That’s for thyself to breed another thee, Or ten times happier, be it ten for one; Ten times thyself were happier than thou art, If ten of thine ten times refigured thee: Then what could death do, if thou shouldst depart, Leaving thee living in posterity? Be not self-will’d, for thou art much too fair To be death’s conquest and make worms thine heir. ++++++++++++ Sonnet Summary : 5 This and the following sonnet are written as a pair.The poet laments the progress of the years, which will play havoc with the young man’s beauty. Human life is like the seasons, spring, summer, autumn’s maturity and fruition, followed by hideous winter. Nothing is left of summer’s beauty except for that which the careful housewife preserves, the essence of roses and other flowers distilled for their perfume. Other than that there is no remembrance of things beautiful. But once distilled, the substance of beauty is always preserved. therefore the youth should consider how his beauty might be best distilled. Summary of Sonnet : 6 Sonnet 6 continues the winter imagery from the previous sonnet and furthers the procreation theme. Winter, symbolizing old age, and summer, symbolizing youth, are diametrically opposed. The theme of the previous sonnet, that summer’s beauty must be distilled and preserved, is here continued. The youth is encouraged to defeat the threatened ravages of winter by having children. Ten children would increase his happiness tenfold, since there would be ten faces to mirror his. Death therefore would be defeated, since he would live for ever through his posterity, even if he should himself die. He is much too beautiful to be merely food for worms, and must be encouraged not to be selfish, but to outwit death and death’s conquering hand. ++++++++++++++++++++ (ஈரேழ் வரிப்பா – 7) +++++++++++++++++ சேயின்றிப் போனால் ! +++++++++++++++++ அதோ ! கிழக்கில் சுடரொளிப் பரிதியின் எழுச்சி அக்கினித் தலையுடன் ஒவ்வோர் விழிக்குக் கீழும் ! வழிபடுவர் வணங்கி புது வடிவை மனிதர் போல் விழிநோக்கில் காட்டுவர் தமது புனித மதிப்பை, சொர்க்க செங்குத்து மலைமேல் ஏறிய பிறகு வலுத்த இளமை மீளுது மையத்து வயதிலே ! மானிடத் தோற்ற வனப்பு ஒப்பனை செய்யும் பொன்மயப் பயணம் புரவலன் மேற் கொள்வான் ! உச்சிமேல் ஏறிய தேர் களைப்பில் ஓய்ந்திடும் வலுவிலா வயதில் ஒளி தேயும் பகல் போல் ! கண்கள் முன்பு கடமை நெறி மாறிப் போயின இறுதியாய்த் தொடுவானில் சரிந்திடும் சூரியன் ! இளங் காளையே ! வாலிபப் பருவம் விடைபெறும் ! நீயும் நின்வாரிசும் மாயும் ஆண் சேயின்றிப் போயின் ! +++++++++++++ Sonnet : 7 Lo! in the orient when the gracious light Lifts up his burning head, each under eye Doth homage to his new-appearing sight, Serving with looks his sacred majesty; And having climb’d the steep-up heavenly hill, Resembling strong youth in his middle age, Yet mortal looks adore his beauty still, Attending on his golden pilgrimage; But when from highmost pitch, with weary car, Like feeble age, he reeleth from the day, The eyes, ‘fore duteous, now converted are From his low tract and look another way: So thou, thyself out-going in thy noon, Unlook’d on diest, unless thou get a son. ++++++++++++ Summary of Sonnet : 7 The poet explores another theme, different from those he has pursued in the preceding sonnets. He draws a simile between the rising and setting sun and youth and age. In the sunset of his days the youth will no longer be surrounded by admirers. Unless he has children to carry on the line and reflect his former beauty, he will vanish unknown into the murky depths of time. When the sun rises, everyone admires it, and pays homage to it, as if it were a king. As it climbs higher in the sky to reach its zenith, mortals admire it still. But as it plunges downwards towards evening, the gaze is averted, and, like ‘unregarded age in corners thrown’, it is ignored and other rising stars take precedence. ‘So you too, fair youth, will be nothing as you age, unless you become the rising sun by having a son.’ ++++++++++++++++++ செவிக்கினிய இசைபோல் குடும்பம் (ஈரேழ் வரிப்பா – 8) ++++++++++++++++++++++++++++++ செவிக்கினிய இசைபோல் குடும்பம் ++++++++++++++++++++++++++++++ செவிக்கினிது கீதம்; இசை கேட்பதில் உனக்கு ஏன் வருத்தம் ? இனிப்பும் இனிப்பும் தமக்குள் போரிடா ! களிப்பு இன்புறும் களிப்பில் இசைமேல் இச்சை ஏன், இன்பம் அளிக்கா விட்டால் ? பூரிப்படை வாயா நீ உனக்குத் துயர் தரும் ஒன்றில் ? சீரிய இசைச்சுவை இகழும் அவன்தனிக் குடும்ப வாழ்வை, இல்லற ஐக்கியம் என்றால் நின் செவிப்பறை வெறுக்கும் ! இசையொலி அழிக்கும், பரிவாய் இகழும் உன்னை, தனிச் சுகத்தில் உடல் உறுப்புகள் தவறாய்ப் பயன்படும் ஒருநாண் மற்றதின் இனிய கணவன் என்பதைப் நோக்கு ஒன்றால் ஒன்று அதிர்வது ஒன்றை ஒன்றை உண்டாக்கும் புனிதக் குடும்பம் போல் பூரிப்புத் தாய்க்குச் சேய் படைப்பு தாய் தந்தை சேய் இணைப்பு சீரிய கூட்டிசைக் களிப்பு பற்பல நாண்களின் சீரிசை போல் சதி, பதி சேய் பிணைப்பு பற்பல நாண்களின் ஊமைக் கீதங்கள் ஒருமைப் படுவது தனித்து ஒருவனாய்க் கிடப்பதில் நடப்பது ஒன்றில்லை. +++++++++ Sonnet : 8 Music to hear, why hear’st thou music sadly? Sweets with sweets war not, joy delights in joy. Why lovest thou that which thou receivest not gladly, Or else receivest with pleasure thine annoy? If the true concord of well-tuned sounds, By unions married, do offend thine ear, They do but sweetly chide thee, who confounds In singleness the parts that thou shouldst bear. Mark how one string, sweet husband to another, Strikes each in each by mutual ordering, Resembling sire and child and happy mother Who all in one, one pleasing note do sing: Whose speechless song, being many, seeming one, Sings this to thee: ‘thou single wilt prove none.’ ++++++++++++++ Sonnet Summary : 8 The theme of the youth’s failure to marry and to have children is continued. A lesson is drawn from his apparent sadness in listening to music. Music itself is concord and harmony, similar to that which reigns in the happy household of father, child and mother, as if they were separate strings in music which reverberate mutually. The young man is made sad by this harmony because he does not submit to it. In effect it admonishes him, telling him that, in dedicating himself to a single life he makes himself worthless, a nonentity, a nothingness. ++++++++++++++++ எழில் இனப் பெருக்கம் ஓர் எச்சரிக்கை Sonnet : 9 Is it for fear to wet a widow’s eye That thou consumest thyself in single life? Ah! if thou issueless shalt hap to die. The world will wail thee, like a makeless wife; The world will be thy widow and still weep That thou no form of thee hast left behind, When every private widow well may keep By children’s eyes her husband’s shape in mind. Look, what an unthrift in the world doth spend Shifts but his place, for still the world enjoys it; But beauty’s waste hath in the world an end, And kept unused, the user so destroys it. No love toward others in that bosom sits That on himself such murderous shame commits. ++++++++++++++ Sonnet Summary : 9 The poet asks if it is fear of making someone a widow that causes the young man to refuse to marry. The argument is unsound, says the poet, for a beautiful youth must leave behind him a form or copy of himself, otherwise the world itself will endure widowhood, and yet have no consolation for its loss. For it will not be able to view the young man resurrected in the eyes of his children. If he persists in this single obduracy, it is an unforgivable shame, showing lack of love to others and equivalent to murdering himself and all his heirs. ++++++++++++++++ (ஈரேழ் வரிப்பா – 10) எழில் இனப் பெருக்கம் ஒரு வேண்டுகோள் மூலம் : வில்லியம் ஷேக்ஸ்பியர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா எவள் மீதும் நேசமில்லை என்றுனக்கு வெட்க மில்லை எதிர்காலச் சந்ததியாய் எது உனக்குப் பிறக்கும் ? உன்னை நேசிப்போர் பலர். அது உனக்கேற்ற வாதம் ஆனால் நீ நேசிப்பது யாருமிலை என்பது வெட்ட வெளிச்சம் எதிர்காலச் சந்ததி இழப்பு உன் கையில் தான் இருக்குது துயர மில்லை உனக்குப் பரம்பரை இன்றிப் போவதில் எழில் இல்ல மாளிகை கட்டாமல் அழிப்பதுன் தீர்மானம் அதைச் செம்மைப் படுத்துவது உன் முக்கிய வேட்கை அந்தோ ! உன் கருத்தை மாற்று நீ என் தீர்ப்பை மாற்றிட ! நேசத்தை விட்டு வெறுப்பு குடிபுகுதல் நேர்மை ஆகுமா ? நீயாக இருப்பதில் விருத்தி பரிவு, பணிவு, நளினம் தரட்டும் உனக்காக மாறிப் பரிவோடு இன விருத்தி நிரூபணம் செய் உன் சந்ததியாய் ஒன்றை உருவாக்கு என் மீதுள்ள நேசத்தால் இளமை எழில் நித்தியச் சந்ததியாய் நிலவிப் பெருகட்டும். +++++++++ Sonnet : 10 For shame deny that thou bear’st love to any, Who for thy self art so unprovident. Grant, if thou wilt, thou art beloved of many, But that thou none lov’st is most evident: For thou art so possessed with murderous hate, That ‘gainst thy self thou stick’st not to conspire, Seeking that beauteous roof to ruinate Which to repair should be thy chief desire. O! change thy thought, that I may change my mind: Shall hate be fairer lodged than gentle love? Be, as thy presence is, gracious and kind, Or to thyself at least kind-hearted prove: Make thee another self for love of me, That beauty still may live in thine or thee. ++++++++++++++ Sonnet Summary : 10 This is the first sonnet of the series in which the poet declares a personal interest in the youth, rather than the general one of desiring for the world’s sake that it be not deprived of his progeny. Here there are two statements, firstly, that he wishes to have an opportunity to change his opinion of the youth (l.9), as implying that his (the poet’s) better opinion is of some value; secondly he attempts the persuasive argument of ‘for love of me’ in order to produce a change in the youth’s intentions. Neither of these amount to a declaration of love, although they do half imply it, for what is love if it is not reciprocated? In any case it is in some sense preparatory to the more impassioned statements of several of the sonnets which are to follow. Apart from that, the argument of this sonnet is similar to that of the previous one: ‘Be not wilfully selfish and cruel to mankind, but replace and repair your decaying mansion by procreation. In that way you live on, and I myself and others will think the better of you.’ ++++++++++++++++

திருமலை நாயக்கர் பொண்டாட்டி மேல் கையை போட்டதினால் குடல் தள்ளிப் போனதாக உதார்விட்ட சொரக்கட்டை......கதை..(2)...

திருமலை நாயக்கர் பொண்டாட்டி மேல் கையை போட்டதினால் குடல் தள்ளிப் போனதாக உதார்விட்ட சொரக்கட்டை......கதை..(2)...

சொரக்கட்டை ஒன்று, பக்கத்து ஊரில் நடக்கும் திரு
விழாவுக்கு செல்வதற்க்காக, தன் பொண்டாட்டி
சொரக்கட்டையிடம்.......

அடியே. அடியே........ நான் திருவிழாவுக்கு போயிட்டு
வர்ரேன்டி..எனக்கு சோறு கட்டி கொடுடீன்னு
சொல்லிட்டு சோத்து பொட்டலத்துடன் திருவழாவுக்கு
புறப்பட்டு சென்றது சொரக்கட்டை.......

சொரக்கட்டை போகும்போது. வழியில் சரியான மழை,
மழையானமழை, பேஞ்சு ஊத்திபிடுச்சு..ஊத்தி. மழையில்
நணைந்த சொரக்கட்டைஒதுங்குவதற்கு வழியில்லாமல்,
மாட்டு வண்டி செல்லும் வழிதடத்துப்பாதையில் அதாவது மாட்டுவண்டிப்பாதையிலுள்ள மணலில் புதைந்துகொண்டு
இளப்பாறியது.

ஒருவழியாக மழையும் நின்றுவிட்டது. மழை விட்டதும்
அந்த வழியாகவந்த மாட்டு வண்டி ஒன்று வந்தது. மாடு
களின் கால்களுக்குள் சிக்கி மிதிபடாமல் தப்பித்த தவளை,
மாட்டு வண்டியின் சக்கரத்துக்கு தப்பிக்க முடியாமல்
வண்டி சக்கரம் ஏறி குடல் தள்ளிப்போயி கிடந்தது
அந்த நேரம் உணவுக்காக அலைந்து திரிந்த கொக்கு
ஒன்று குடல் தள்ளிப் போயி கிடந்த தவளையைக்
கண்டு அதன் அருகில் வந்தது.
கொக்கு அருகில் வந்ததை, கண்ட குடல் தள்ளிப்போயி
கிடந்த சொரக்கட்டைஅண்ணா, கொக்கு அண்ணா...............
மன்னர் திருமலை நாயக்கர் பொண்டாட்டி மேலே
கையைப் போட்டேன்.மன்னர் அம்பால குத்தியதால்
குடல் தள்ளிப்போயி கிடக்கிறேன்.அண்ணா, என்னய
ஒன்னும் செஞ்சிறாதிங்க அண்ணா........... எனக்கு ஒரு
உதவிமட்டும் செய்யுங்கண்ணாஎன்று கேட்டது
சொரக்கட்டை,கொக்கும், மன்னர் பொண்டாட்டி மேல
கையப்போட்ட சொரக்கட்டய  பெருமையாகவும்
கொஞ்சம் பயந்தும் இருந்ததை காட்டிக்கொள்ளாமல்

என்ன, உதவிப் பன்ன்னுமுன்னு கேட்டுச்சு................

மாட்டுவண்டி சக்கரம் ஏறி குடல் தள்ளிப்போயி
கிடப்பதை மறைச்சு..“ திருமலை நாயக்கர்
பொண்டாட்டி மேல கையைப் போட்டதால் மன்னர்
அம்பால குத்தி குடல் தள்ளிப்போயி கிடக்குறேன்னு,
என் பொண்டாட்டிகிட்ட சொல்லி என்னய பார்க்க வரச் சொல்லுங்கண்ணா....என்றது.
கொக்கும் பறந்து போயி சொரக்கட்டையின்
பொண்டாட்டிகிட்டே, இப்படி சொல்லியது.
“ ஓம் புருஷன்  திருமலை நாயக்கர் பொண்டாட்டி
மேல கையை போட்டதால.... மன்னர் அம்பால
குத்த்துப்பட்டு குடல் தள்ளிப்போயி கிடக்காரும்மா”...........
ஒன்னையும் ஒங்க கூட்டத்தையும் பார்க்க வரச்
சொன்னாரும்மா............ என்றது கொக்கு.

மாட்டு வண்டி சக்கரம் ஏறி குடல் தள்ளிப்போனதை
மறைச்சு ரெம்ப பெருமையாக திருமலை நாயக்கர்
பொண்டாட்டி மேல கையைப் போட்டதால குடல்
தள்ளிப்போனதாக உதார்விட்ட சொரக்கட்டை
போல்தானுங்க,........ஆதிக்கச்சாதிவெறிப்பிடித்தலையும்
கூட்டம் நாங்க ஆண்ட பரம்பரை என்று உதார் விடுவதும், அடக்கப்பட்ட.ஒடுக்கப்பட்ட. திருகுமாவளவன் போன்ற
சாதிக்காரர்கள். ஆதிக்கச்சாதிவெறிக் கூட்டத்த எதிர்க்க துப்பின்றி.....நாங்களும் ஆண்ட பரம்பரை. ஆளும்
பரம்பரை என்று சொரக்கட்டை மாதிரி உதார்
விடுவதும், தன்க்கு கீழ் உள்ள  சாதிக்காரர்களையும்.
ஒரே சாதியிலுள்ள வரியவர்களையும் அடக்கி
ஒடுக்கி எல்லா சாதிக்காரர்களும்
இந்த சொரக்கட்டை மாதிரிதான் உதார்
விட்டுக் கொண்டு இருக்கிறார்கள்

ஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள்

ஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) மூலம் : கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா ஒற்றை இதயத்தால் நான் இப்போது உரைப்பவை எல்லாம் நாளை ஆயிரம் இதயங்கள் சொல்லும் ! பிறக்க வில்லை நாளை இறந்து விட்டது நேற்று ! ஏன் அவலம் அவைமேல் இன்று இனித்திடும் போது ? கலில் கிப்ரான் (1883-1931) “மனித இதயம் உதவி நாடிக் கூக்குரல் இடுகிறது. மனித ஆத்மா விடுதலை கேட்டு மன்றாடுகிறது. ஆனால் நாம் அந்தக் கூக்குரல்களைக் கவனிப்ப தில்லை ! காதில் கேட்பதில்லை ! புரிந்து கொள்வது மில்லை ! ஆனால் அவற்றைக் கேட்டுப் புரிந்து கொள்ளும் ஒருவனைப் பைத்தியம் என்று சொல்லி நாம் அவனை விட்டு ஓடுகிறோம்.”. கலில் கிப்ரான். கடவுளின் படைப்பு : கடவுள் தன்னிடமிருந்து ஆன்மாவைப் பிரித்து அதை ஓர் அழகிய தேவதையாக ஆக்கினார். அவளுக்கு ஆசீர்வாதமாய்க் கனிவையும், கவர்ச்சியையும் அருளினார். இன்பக் கிண்ணத்தை அவளிடம் கொடுத்து “இறந்த காலத்தையும், எதிர் காலத்தையும் நீ மறக்க நேர்ந்தால் ஒழிய இந்தக் கிண்ணத்திலிருந்து நீ எதையும் அருந்தாதே” என்று கூறினார். “ஏனென்றால் மகிழ்ச்சி என்பது தற்போதைய தருணத்தைத் தவிர வேறு சமயத்தில் வருவதில்லை.” மேலும் துன்பக் கிண்ணத்தையும் அவளுக்குக் கொடுத்து, “இந்தக் கிண்ணத்தில் உள்ளதைக் குடி. அப்போதுதான் வாழ்க்கையின் இன்பவேளை விரைந்து நழுவும் தருணத்தை நீ அறிவாய். ஏனெனில் சோகமே எப்போதும் நம்மிடம் மேலோங்கி நிற்பது.” கலில் கிப்ரான். “கலில் கிப்ரான் ஆற்றல் அவரது ஆன்மீக வாழ்க்கையின் உன்னதக் களஞ்சியத்திலிருந்து ஊறி வந்தது. இல்லாவிட்டால் அவர் சுயமாக உண்டாக்கியவை எல்லாம் அத்துணை உலக மயமாக, மகத்துவமாக, அழகு மொழி மூலம் ஆடை போர்த்திய படைப்புக்களாய் அமைந்திருக்க முடியாது.” கிளாடி பிராக்டன் (Claude Bragdon) “நானொரு வார்த்தை சொல்ல வந்தேன். நானதைச் சொல்ல வேண்டும் இப்போது. மரணம் என்னைத் தடுத்தால் நாளைக்கு (வேறொருவரால்) அது சொல்லப்படும். ஏனெனில் நீடிக்கும் வரலாற்று நூலில் (Book of Eternity) ஒருபோதும் ஒரு ரகசியத்தை எதிர்காலம் புறக்கணிக்காது !” கலில் கிப்ரான் நானொரு வார்த்தை சொல்ல வந்தேன் ! நானதைச் சொல்ல வேண்டும் இப்போது ! மரணம் என்னைத் தடுத்தால் நாளைக்கு உரைக்கப்படும் அது ! ஏனெனில் நீடிக்கும் வரலாற்று நூலில் வருங் காலம் ஒருபோதும் புறக்கணிப்ப தில்லை ஒரு ரகசியத்தை ! கலில் கிப்ரான் “கடவுளின் பிரதிபலிப்பான அன்பின் மகிமையிலும் அழகின் ஒளிச்சுடரிலும் நான் வாழப் பிறந்தேன். இங்கிருக்கிறேன் நான் (அவ்விதம்) வாழ்ந்து கொண்டு ! அந்த வாழ்க்கை அரங்கிலிருந்து என்னைத் துரத்த முடியாது. ஏனெனில் உயிரோடு வாழும் எனது வார்த்தைகள் மூலம் மரணத்திலும் நான் உயிர்ப்பித்து வாழ்பவன் !” அன்பின் மகிமை, அழகின் ஒளிச்சுடர் கடவுளின் பிரதி பலிப்பு ! அவற்றில் வாழப் பிறந்தேன் ! அவ்விதத்தில் நானிங்கு வசிக்கிறேன் ! துரத்த முடியா தென்னை அந்த வாழ்வு அரங்கத்தை விட்டு ! ஏனெனில் மரணத்திலும் நான் வாழ்பவன் உயிரோடு வாழும் என் வார்த்தைகள் மூலம் ! கலில் கிப்ரான் கலில் கிப்ரான் வாழ்க்கை வரலாறு லெபனீஸ் அமெரிக்கக் கவிஞரான கலில் கிப்ரான் ஓர் உயர்ந்த ஓவியக் கலைஞர், சிறந்த ஆன்மீகக் கட்டுரையாளர், ஒப்பற்ற கவிஞர், உன்னத வேதாந்த மேதை. கிறித்துவரான கலில் கிப்ரான் முதலில் அராபிக் மொழியிலும், பிறகு ஆங்கிலத்திலும் தன் கலைப் படைப்புகளை வடித்தார். 1923 இல் அவர் ஆங்கிலத்தில் எழுதிய “தீர்க்கதரிசி” (Prophet) என்னும் கவிதைத் தொகுப்பு மூலம் உலகப் புகழ் பெற்றார். 26 கவிதைக் கட்டுரைகள் கொண்ட அந்த நூல் 20 மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டுள்ளது. வறுமையில் வாழ்ந்த கலில் கிப்ரான் முறையாகக் கல்வி கற்க முடியாமல், இளம் வயதில் ஒரு கிராமப் பாதிரியாரிடம் மதத்தின் உன்னதம் பற்றியும் பைபிளைப் பற்றியும் விளக்கமாக அறிந்து பிறகு அராபிக், சிரியா மொழிகளை அவரிடம் கற்றுக் கொண்டார். பின்னர் தானே உலக வரலாறுகளையும், விஞ்ஞான அறிவையும் பெற்றுக் கொண்டார். பத்து வயதாகும் போது கலிக் கிப்ரான் குன்றிலிருந்து தவறிக் கீழே விழுந்து வலது தோளைப் பலமாகக் காயப் படுத்திக் கொண்டார். அந்த உடற் பழுது அவரை வாழ்க்கை முழுவதிலும் பாதித்தது. வட லெபானில் உள்ள பிஷாரி (Bechari or Bscharri in Lebanon) என்னும் ஊரில் 1883 ஜனவரி 6 ஆம் தேதி பிறந்தார் கலில் கிப்ரான். அப்போது துருக்கியைச் சேர்ந்த ஒரு மாநிலமாக இருந்தது லெபனான். அதில் ஒரு பகுதி சிரியாவைச் சேர்ந்திருந்தது. அவர் பிறக்கும் போது அவரது அன்னைக்கு முப்பது வயது.. தாயின் மூன்றாவது கணவருக்குப் பிறந்தவர்தான் கலில் கிப்ரான். தகப்பனார் பொறுப்பற்றவராய் வாழ்ந்து குடும்பத்தை வறுமையில் தள்ளித் தாயாரால் ஒதுக்கப் பட்டார். படிப்பில்லாத அன்னை மன உறுதியால் இன்னலுடன் குடும்பத்தைக் காப்பாற்றினார். கலில் கிப்ரானுக்கு எட்டு வயதாகும் போது, அவரது தகப்பனார் வரிப்பணத்தைச் சரிவரக் கட்டாமல் சிறையில் தள்ளப்பட்டார். அரசாங்கம் அவர்களது வீட்டைப் பறிமுதல் செய்ததால் அனைவரும் வெளியேற்றப் பட்டு உறவினர் இல்லத்தில் வாழ வேண்டியதாயிற்று. மன ஊக்கமுடைய அன்னை தன் பிள்ளைகளை (இரண்டு ஆண் மற்றும் இரண்டு பெண்கள்) அழைத்துக் கொண்டு அமெரிக்காவுக்குப் புலம்பெயர்ந்தார். 1894 இல் விடுதலையான தகப்பனார் புலம்பெயரத் தயங்கி லென்பனானில் தங்கிக் கொண்டார். சிரியன் சமூகக் குழுவினர் வாழும் பாஸ்டனில் அனைவரும் முதலில் தங்கினார். 1895 செப்டம்பர் 30 இல் கலில் கிப்ரான் தனது 12 ஆவது வயதில் முதன்முதல் பள்ளியில் சேர்ந்து ஆங்கலம் கற்கலானார். அந்த வயது முதல் அவரது ஓவியத் திறமை சீராக வெளிப்பட்டு ஆசிரியர் பலரது கவனத்தைக் கவர்ந்தது. பாஸ்டனில் செழித்த கலாச்சார, நாடக, கான இசைக் கலைகள் கலில் கிப்ரானைப் பற்றிக் கொண்டன. 1897 இல் கலில் கிப்ரான் லெபனானுக்குத் திரும்பி பேரூட்டில் இரண்டு ஆண்டுகள் தங்கி அரேபிக் இலக்கியம் கற்றார். 1904 இல் (21 ஆவது வயதில்) கலில் கிப்ரானின் முதல் ஓவியக் கண்காட்சி பாஸ்டனில் அரங்கேறியது. 1908 முதல் 1910 வரை புகழ் பெற்ற பிரென்ச் ஓவிய மேதை “ஆகஸ்டு ரோடின்” (August Rodin 1840-1917) கீழ் சிற்பக் கலை, ஓவியக் கலைப் பயிற்சி பெற கலில் கிப்ரான் பாரிசுக்குச் சென்றார். கலில் கிப்ரானின் ஓவியங்கள் பல அவரது குரு ஆகஸ்டு ரோடின் படைப்புகளை ஒத்திருப்பதில் வியப்பில்லை. கலில் கிப்ரானின் ஆரம்ப காலப் படைப்புகள் அரேபிக் மொழியிலும், பிற்காலப் படைப்புகள் 1918 முதல் ஆங்கிலத்திலும் வடிக்கப் பட்டன. 1912 இல் அவர் நியூயார்க் நகரில் இடம்மாறி கவிதைப் படைப்புக்கும் ஓவியக் கலைக்கும் தன் ஆயுட் காலத்தை அர்ப்பணித்தார். தனது 48 ஆவது வயதில் (ஏப்ரல் 10 1931) கலில் கிப்ரான் நியூயார்க் நகரில் காலமானர். அவரது உடல் தாய் நாடான லெபனானுக்குக் கொண்டு வரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.. ++++++++++++++++++ கலில் கிப்ரான் கவிதை -1 என்மேல் பரிவு காட்டு என் ஆத்மாவே ! என் ஆத்மாவே ! நீ ஏன் அழுகிறாய் ? என் பலவீனத்தை நீ அறியாயோ ? உன் கண்ணீரின் கூர்மை காயப் படுத்தும் என்னை ஊடுருவி ! காரணம் என்பிழை தெரியா தெனக்கு ! எதுவரை நீடிக்கும் உன் அழுகை ? நின் கனவுகள், ஆசைகள், அறிவுரைகள் எவற்றையும் கலைக்க என்னிடம் எதுவு மில்லை மனித வார்த்தைகள் தவிர ! என் மீது கண்ணோக்கு என் ஆத்மாவே ! உன் உபதேசங்களைக் கவன மாய் நான் பின்பற்றி இரை யானது என் வாழ்வு முழுவதும் ! எப்படி நோகிறது பார் என் இதயம் ? களைத்துப் போனது என் வாழ்க்கை பின்பற்றி உன்னை ! உன்னதம் பெற்றது என் இதயம் உன் ஆசன பீடத்தில் ! அடிமை யானது உன்னிடம் இப்போது பிணைத்துக் கொண்டு ! எனக்குத் துணைவனாய் இருந்த என் பொறுமை இப்போது எனக் கெதிராய்ப் போட்டி போடுது பகைவனாய் ! வாலிப வயதெனக்கு வழங்கியது வாழ்வில் ஓர் நம்பிக்கை ! கண்டிக்கும் அது என்னை இப்போது கவனக் குறைவால் பேணிப் பாராததால் ! எப்போதும் ஏன் என்னை வற்புறுத் துகிறாய் என் ஆத்மாவே ? எனது இன்பங்களை எல்லாம் புறக்க ணித்தேன் ! உன் அறிவுரைக் குடன்பட்டு என்மீது புகுத்திய உன் நியதியைப் பின்பற்றி வாழ்வின் பூரிப்பைத் துறந்தேன் ! நீதி வழங்கு நீ எனக்கு ! அல்லது கொடு மரணத்தை விடுவிக்க என்னை நியாயமே உனது உன்னத நெறியான தால் ! என் மீது பரிவு காட்டு என் ஆத்மாவே ! என் மீது அன்பை ஏற்றி இருக்கிறாய் என்னால் சுமக்க முடியாப் பளுவாய் ! நீயும் அன்பும் இணை பிரியா வல்லினம் ! ஆனால் நானும் செல்வமும் இணை பிரியா பலவீனம் ! எப்போ தாவது போராட்டம் நின்று விடுமா வல்லினத் துக்கும் மெல்லினத் துக்கும் இடையே ? என் மீது பரிவு காட்டு என் ஆத்மாவே ! என் பிடிக்கு அகப்படாத அதிர்ஷ்டத்தை எனக்கு அளித்தி ருக்கிறாய் ! நீயும் அதிர்ஷ்டமும் உச்சி மலையில் மீது உட்கார்ந் திருக்கிறீர் ! ஆனால் நானும் இடர்களும் பள்ளத்தில் தள்ளப் பட்டுள்ளோம் ஒன்றாக ! எப்போ தாவது கூடி ஐக்கிய மாகுமா மலையும் பள்ளமும் ? என் மீது பரிவு காட்டு என் ஆத்மாவே ! எழில் மயத்தை காட்டினாய் எனக்கு ! ஆனால் ஏனோ அதை ஒளித்து வைத்தாய் ! நீயும் எழிலும் ஒளிச்சுடராய் வாழ்கிறீர் ! ஆனால் நானும் அறியாமையும் இருள் வெளியில் சிறைப் பட்டோம் ! எப்போ தாவது படையெடுத்து வெல்லுமா ஒளி யானது இருளின் மீது ? முற்றுப் பெறுவதில் தான் உந்தன் பூரிப்பு வந்தடையும் உனக்கு ! அதை எதிர்பார்த்து நீ இன்பம் அடைகிறாய் இப்போது ! ஆயினும் இந்த உடல் வாழ்க்கையில் துன்புறுகிறது வாழ்ந்திடும் போது ! இதுதான் என்னைக் குழப்பும் என் ஆத்மாவே ! முடிவற்ற நீடிப்பை நோக்கி துரிதமாய்ப் போகிறாய் நீ ! ஆயினும் இந்த உடல் மெதுவாகச் செல்லுது மரணத்தை நோக்கி ! காத்து நிற்ப தில்லை நீ அவனுக்கு ! விரைவில் அவனும் மறைவ தில்லை ! இது சோக மளிக்கும் எனக்கு என் ஆத்மாவே ! சொர்க்க புரி உன்னை ஈர்ப்பதால் நீ உயரத்தில் ஏறுகிறாய் ! ஆயினும் இந்த உடல் கீழே வீழ்கிறது பூமியின் ஈர்ப்பால் ! ஆறுதல் அளித்திடாய் நீ கடவுளுக்கு ! அவரும் உனைப் பாராட்டுவ தில்லை ! இதுதான் என் அவலநிலை என் ஆத்மாவே ! மெய்ஞானக் களஞ்சியம் நீ ஆயினும் இந்த உடல் அறிவைப் புரிவதில் பரம ஏழைதான் ! விட்டுக் கொடாதவன் நீ ! கீழ்ப்படி யாதவன் அவனும் ! இதுதான் எனக்கு வேதனை என் ஆத்மாவே ! இரவின் மௌன வேளையில் தேவனைக் காணச் சென்று இனித்திடும் தெரிசனம் பெறுவாய் ! ஆயினும் இந்த உடல் என்றும் முடங்கிக் கிடக்கும் பிரிவிலும் நம்பிக்கை இழப்பிலும் கசப்ப டைந்து ! இதுதான் எனக்குச் சித்திரவதை என் ஆத்மாவே ! பரிவு காட்டு என்மீது என் ஆத்மாவே ! ++++++++++++++ “நானிங்கு பிறந்தது எல்லோரோடும் இருப்பதற்கு, எல்லோருக்கும் உதவுவதற்கு ! எனது ஏகாந்தத்தில் இன்று நான் புரிவது நாளைக்குப் பல்வேறு மாந்தரால் எதிரொலிக்கப்படும்.” நானிங்கு பிறந்தது அனைவ ரோடும் வாழ்வதற்கு ! அனைவ ருக்கும் உதவுதற்கு ! எனது தனிமையில் இன்று நான் புரிவதை ஏனைய மாந்தர் எதிரொலிப்பார் நாளை ! கலில் கிப்ரான் என் ஆத்மாவைக் கவர்ந்து கொள்ளும் மிருதுவான முரட்டுக் கரங்கள் யாருடையவை ? கசப்பான களிப்பும், இனிப்பான வலியும் கலந்து என் இதயத்தில் ஊறிப் போயிருக்கும் ஒயின் எது ? இரவின் மௌன வேளையில் என் தலையணை மேல் பறக்கும் அந்தச் இறக்கைகள் யாவை ? என் தூக்கம் கலைக்கும் அவை ! என்ன நடக்கு தென்று எவரும் அறியக் காணாது ! ஆனந்தக் களிப்பை விடப் பேருன்னத மான சிரிப்பின் பிரதிபலிப்பை விடப் பேரழகுத் துயரம் கலந்திருக்கும் எனது பெரு மூச்சில் ! கலில் கிப்ரான் +++++++++++++++++++++++ கவிதை -2 (பாகம் -1) << காதலியுடன் வாழ்வு >> (வசந்த காலம்) ++++++++++++++++++++++++ என் கண்மணியே ! வா இந்தக் குன்றின் மேல் இருவரும் உலாவி வருவோம் ! பனிப் பொழிவுகள் நீராய் ஓடும் ! உறக்கத்தி லிருந்து வாழ்க்கை உயிர்த் தெழுந்து மேடு பள்ளங்களில் திரிந்து வருகிறது ! வசந்த காலம் வைத்த தடங்களைப் பின்பற்றுவோம் தூரத் தளங்களில் ! பசுமைக் குளிர் வயல்களுக்கு மேல் உயர்ந்த மலை உச்சிக்கு நாம் ஏறுவோம் மகத்தான உள்ளெழுச்சி நம்மை இழுத்துக் கொள்ள ! விடிந்துள்ள வசந்த காலம் குளிர் காலத்து அங்கியை மடித்து வைத்து எலுமிச்சை மரங்கள் மேல் படிய விட்டது ! பார்ப்பதற்கு இரவில் அலங்கரித்த பெருநகர்த் திருமணப் பந்தலில் உள்ள மணப்பெண் போல் தெரிகிறது ! ஒருவரை ஒருவர் தழுவிக் கொள்ளும் காதல் ஜோடிகள் போல் தெரிகின்றன திராட்சைக் கொடிகள் ! பாறைகளுக் கிடையில் நடனமிடும் சிற்றோடைகள் களிப்புடன் பாடிக் கொண்டு ! மொட்டுகளில் சட்டென முகிழ்த் தெழும் பூக்கள் இயற்கை இதயத்தில் களஞ்சியாய்ச் செழித்த கடல் வயிற்றி லிருந்து வரும் நுரை போல் ! என் கண்மணியே ! வா மல்லிகைக் கிண்ணத்தில் கடந்த காலத்தில் குளிர்ந்த கண்ணீர்த் துளிகளைக் குடித்துத் தேற்றுவோம் நம் ஆத்மாவை ! பறவைகள் பொழிந்திடும் கீதங்களைக் கேட்டு உலாவித் திரிவோம் உவகை யோடு மதி மயக்கம் உண்டாக்கும் தென்றலில் ! ஊதாப் பூக்கள் ஒளிந்திருக்கும் அந்தப் பாறை அருகிலே நாம் அமர்ந்தி ருப்போம் ! அவை கொடுக்குக் கொள்ளும் இனிய முத்தங்களை பரிமாறிக் கொள்வோம் நாமிருவரும் ! +++++++++++++++ “காதல் அன்பு தன்னைத் தவிர வேறெதையும் தருவதில்லை. தன்னைத் தவிர வேறெதையும் ஏற்றுக் கொள்வதில்லை. காதல் அன்பு எதனையும் தனக்கென பற்றிக் கொள்வதில்லை. அதை எவரும் கைப்பற்ற முடிவதில்லை. ஏனெனில் காதல் அன்புக்கு காதல் அன்பே போதுமானது.” கலில் கிப்ரான் (1883-1931) “ஒவ்வொருவருக்கும் உன் உணவைப் பங்கிட்டுக் கொடு. ஆனால் அதே உண்டியிலிருந்து எடுத்து நீ உண்ணாதே. ஆடிப் பாடிக் கூடிக் களித்திரு. ஆனால் உங்களில் ஒவ்வொருவரும், வீணைக் கருவியின் நாண்கள் தனித்தனியாய் ஒலித்து ஒருங்கே கீத இசையை எழுப்புவதுபோல் தனித்த உரிமையோடு வாழ்ந்திருக்கட்டும்.” கலில் கிப்ரான் << வேனிற் காலம் >> வயல் வழியே செல்வோம் வா என் கண்மணி ! வருகிறது அறுவடைக் காலம் ! பரிதியின் விழிகள் பக்குவ மாக்கும் பயிர்களை ! காசினி விளைத்திடும் கனிகளைக் கண்காணித்து வருவோம் இதயத்தின் ஆழத்தில் விதைக்கும் காதல் வித்துக்கள் விளைவிக்கும் களிப்புத் தானி யங்களை ஊட்டி வளர்ப்பது அந்த ஆன்மா ! முடிவில்லாக் கொடைகள் அளிப்பது இயற்கை ! இதயத்தை ஆட்கொண்டு வாழ்வு செழிப்படைந்து மூழ்கிப் போவதால் நிரம்பட்டும் நமது சேமிப்புக் களங்சியம் இயற்கையின் விளைவுப் பயிர்களால் ! பூக்களால் நமது படுக்கை ஆக்கப் படட்டும் ! ஆகாயம் நமது போர்வை யாய் அமையட்டும் ! மெல்லிய வைக்கோல் தலையணை மேல் சாயட்டும் நம்மிரு தலைகளும் ! உடல் உழைப்பில் சற்று ஓய்வெடுத்து ஓடை முணு முணுப்பைக் கேட்போம் நாம் ! ++++++++++++++ << பேராற்றல் பெறும் அமெரிக்கா >> கலில் கிப்ரான் சங்கமம் அடையும் புத்துலகுக்கு ஓர் ஆத்மா உண்டு ! உறுதியாய் அந்த ஆத்மாவுக்கு ஒரு குரலும் உண்டு ! அமெரிக் காவின் குரல் அகில தேசக் குரலாய் அமைவது அவனி விதி ! அந்நாட்டுக் கலை, கலாச்சாரம், சந்ததிகள் அந்நியர் ஈடுபாட்டால் கறைபடும் நிறம் மாறி ! உன்னத யுரேசிய ஆன்மாக் களின் உண்மை அழகு உருவாகி வருகிறது அதன் கருவாகி ! அகில நாடுகள் தழுவும் மகத்துவ ஒருமைப் பாட்டுணர்வை உருவாக்கும் ! பல்வேறு கலாச்சாரம் பின்னிடும் பன்னிறப் பேழை அது ! அந்த அந்த தேச மாந்தர் மாறுபாடாய்ச் சிரம்மேல் கொள்கிறார் அவரவர் சமூகத்து வரலாற்றுப் பழக்கத்தை ! அனைவரும் ஒருமித்து நோக்குவது அமெரிக்க மண்ணை ஒரு பொதுத் தளமாய் ! ஆயினும் பொதுவில்லாக் கருணை உள்ளம் உதிக்கிறது அங்கே எதிர்பாராது ! அந்தப் பரம்பரையில் படிப்படியாய் விருத்தி யாகி அனைவரையும் பிணைக்கும் ஓரின உணர்ச்சி ! கலப்புக் கலாச்சாரமே கவர்ந்து உருவாகி வருகுது அமெரிக்க ஐக்கியம் பேராற்ற லோடு ! ++++++++++++++ “உன் சேமிப்புக் களஞ்சியத்திலிருந்து நீ கொடுக்கும் போது உன் கொடை அளவு சிறிதே ! உன்னை முழுவதும் நீ எப்போது அர்ப்பணம் செய்கிறாயோ அதுதான் உண்மையான பெருங் கொடை.” கலில் கிப்ரான் (1883-1931) “வெளிப்படையாகத் தெரியும் பரிவன்புடன் செய்யும் ஒரு பணி. பரிவன்பு இல்லாது நீ வெறுப்போடு பணி செய்ய நேர்ந்தால் அந்த வேலையை விட்டு விலகி ஆலயத்தின் முன்னமர்ந்து பரிவோடு பணிபுரிவோர் இடும் பிச்சையை நீ பெற்றுக் கொள்ள வேண்டும்.” கலில் கிப்ரான் << இலையுதிர் காலம் >> வா நாமிருவரும் போவோம் முந்திரிப் பழத் தோப்புக்கு திராட் சையைச் பறித்துச் சாரெடுக்க ! பழரசத்தை விட்டு வைப்போம் பழைய குடங்களில் ! காரணம் : யுக யுகமாய்ச் சேர்ந்திடும் அறிவை ஆன்மா முடிவில்லா நீடிப்புப் படகுகளில் வடித்துள்ளதால் ! மீளுவோம் நமது குடிலுக்கு ! வீழ்ந்திட வைக்கும் மஞ்சல் இலைகளை வீசிடும் காற்று ! வேனிற் காலத் துக்கு இலைகள் மூடும் உதிரும் பூக்கள் இரங்கற் பா பாடும் ! எனக்கென்றும் உரியவளே ! வீட்டுக்குள் வா என் கண்மணி ! வேனிற் தளம் நோக்கிப் புள்ளினம் புரிந்திடும் பயணம் ! குளிர்ந்து போன அறுவடை வயல்கள் அழுது வாடும் தனிமையில் ! கண்ணீர் வரண்டு போகும் மல்லிகைச் செடிக்கும் முல்லைக் கொடிக்கும் ! திரும்பிச் செல்வோம் நாம் பாடிக் களைத்த அந்த ஓடைக்கு ! பொங்கி எழுந்த ஊற்றுகள் அடங்கி விட்டன அழுது தீர்த்த தீவிரத்தில் ! பழங் குன்றுகள் கழற்றிச் சேமிக்கும் தமது பன்னிற உடுப்புகளை எச்சரிக்கை யோடு ! வா என் கண்மணி ! இயற்கை ஓய்ந்து போனது நியாயமே ! மகிழ்ச்சிக்கு விடைகூறி வழியனுப்பி வைக்கும் இயற்கை மௌன மாக மனத் திருப்தி யோடு சோக கீதம் இசைத்து ! ++++++++++++++ Winter to be included +++++++++++++ முடிவில்லா நீடிப்புள்ள ஆத்மா பூர்த்தி பெறுவதில்லை ! அது பூரணத்தைத் தேடி எப்போதும் செல்கிறது ! பிறகு என்னிதயம் எழில்மய வாழ்வை நோக்கிக் கேட்கிறது : “நீயே எல்லா ஞானக் களஞ்சியம் ! பெண்ணின் மர்மத்தை எனக்குத் தெளிவு செய் !” அது பதில் அளித்தது. “ஓ மனித இதயமே ! பெண் என்பவள் உனது மனப் பிரதிபலிப்பே ! நீ எப்படி உள்ளாயோ அவள் அப்படி இருக்கிறாள் ! எங்கெல்லாம் நீ வசிக்கிறாயோ அங்கெல்லாம் அவள் வாழ்கிறாள் ! அறிவில்லாதவர் விளக்காத மதத்தைப் போன்றவள் அவள் ! முகில் மறைக்காத ஒரு நிலவைப் போன்றவள் ! மாசில்லாத் தென்றலைப் போன்றவள் !”கலில் கிப்ரான் (The House of Fortune) (Tears & Laughter) “அனுதினம் நீ வாழும் வாழ்க்கையே உனது ஆலயம் ! உனது மதம் ! கலில் கிப்ரான் (1883-1931) “துயர்களை ஒருபோதும் நேராக நோக்காதவன், மகிழ்ச்சியை அடையத் தகுதி பெறாதவன்.” கலில் கிப்ரான் (கண்ணீரும் சிரிப்பும்) “எல்லையற்ற இந்தப் பிரபஞ்சத்தின் மேற்தளக் காற்றில் பறந்து நான் கற்பனை உலகில் மிதந்தேன் ! ஆங்கே தெய்வீக ஒளிவீசும் வட்டாரத்தோடு நெருங்கி இருந்தேன் ! இங்கே நான் பொருளாயுதச் சிறையில் கிடக்கிறேன் ! கலில் கிப்ரான் << அலையின் கீதங்கள் >> உறுதியுள்ள கடற்கரை என்னரும் நாயகன் ! நானவள் ஆசை நாயகி ! இறுதியில் இருவரும் இணைந்தோம் காதலால் ! நிலவென்னை இழுக்கும் அவனிடமிருந்து ! நெருங்கிப் பிறகு பிரிவேன் வெறுப்புடன் பிரியா விடை பெறுவேன் சிறிது சிறிதாய் !விண்ணீலத் தொடுவானின் பின்புறம் ஒளிந்து விரைவேன் என்னுடை வெண்ணிற நுரைகள் அவன் பொன்னிற மணல்மேல் தெளிக்கும் ! பின்னிக் கலப்போம் ஒன்றாய் உருகிக் குவிந்த சுடர் ஒளியில் ! அலைகளின் தாகத்தைத் தணித்து அதனுடை மோகத்தைத் தீர்ப்பேன் ! எனது குரல் ஒலி மிதமாகும் எனது கோபம் அடங்கிப் போகும் ! பொழுது வெளுத்ததும் காதல் விதிகளைப் பூஜித் திடுவேன் அவன் காதில் ! தழுவிடு வான் அவன் என்னை நீடித்த இச்சை யோடு ! மாலையில் நம்பிக்கைக் கீதம் இசைப்பேன் மெல்லிய முத்தம் அவனுக்கு முத்திரையாய் முகத்தில் இட்டுப் பயந்து நகர்வேன் ! அமைதியாய் பொறுமையில் அவனோ சிந்தித் திடுவான் ! என் சீற்றத் துக்கு அடைக்கலம் தரும் அவன் பரந்த மார்பு ! அலைகள் மீளும் போது நாமிருவர் தழுவிக் கொள்வோம் ஒருவரை ஒருவர் ! அலைகள் நீங்கும் போது அவன் கால் அடியில் வீழ்வேன் நான் பூஜித்து ! ++++++++++++++ என்னிதயம் நடந்து சென்று அன்புக்கும் அழகு மயத்துக்கும் மகளான ஞானக் களஞ்சியத்தைக் கேட்டது : “எனக்கு ஞானத்தை அளித்திடு, பிற மக்களுக்கு நான் அதைப் பகிர்ந்து கொள்ள.” அதற்குப் பதில் கிடைத்தது : “ஞான மென்று சொல்லாதே ! ஆனால் சொத்தென்று கேள் ! எனென்றால் மெய்யான சொத்து வெளிச் சூழலிருந்து வருவதில்லை ! புனிதத்திலும் புனிதமான வாழ்விலிருந்து ஆர்ம்பமாகிறது. உன் அனுபவத்தை மற்ற மக்களோடு நீ பகிர்ந்து கொள்.” கலில் கிப்ரான் (The House of Fortune) (Tears & Laughter) “நீ மௌன நதியிலிருந்து நீர் அருந்துகிற போதுதான் மெய்யாகப் பாட முடியும். நீ மலைச் சிகரத்தை எட்டிப் பிடிக்கும் போதுதான் நீ மேலேறத் துவங்குகிறாய். இந்தப் பூமித் தளம் உன் பாதங்களை உரிமை கொள்ளும் போதுதான் நீ மெய்யாக நாட்டியம் ஆட முடியும்.” கலில் கிப்ரான் (1883-1931) “மனிதரை, அவரது சந்ததிகளை, மனிதரின் விதிகளை, அவரது உபதேசங்களை, கருத்துகளை, அவரது ஆரவாரத்தை மற்றும் புலம்பலைத் தவிர்ப்பதற்கே அல்லாமல், நான் மதத்தின் பொருட்டு ஏகாந்தத்தைத் தேடவில்லை.” கலில் கிப்ரான் (From A Treasury of Kahlil Gibran 1951) << அலையின் கீதங்கள் >> நடனம் ஆடினேன் நான் பன்முறைக் கடற் கன்னிகளைச் சுற்றி வந்து ஆழ்கடல் உள்ளிருந்து மேலேறி ! பாறை மீதமர்ந் தேன் தாரகைகள் நோக்கிட ! என்னிடம் காதலர் பன்முறைப் புகார் செய்வதைக் கேட்டுளேன் தாம் குள்ளமாய் உள்ளதை ! ஆறுதல் கூறுவேன் அவர்க்கு மனச் சோர்வுகள் நீங்கிட ! பாடுபடுத்துவேன் பாறைகளைப் பன்முறை ! புன்முறுவ லோடு தடவிக் கொடுப்பேன் ! ஆயினும் அவை நன்றியுடன் எனைக் கண்டு நகைப்ப தில்லை ! மூழ்கிடும் ஆத்மாக்களைத் தூக்கி வந்து பன்முறைப் பரிவுடன் அன்புக்கரை சேர்த்தேன் ! ஆத்மாக் களுக்கு மன உறுதி அளிக்கும் கடற்கரை என் உடற் சக்தி எடுத்து ! விலை மதிப்பில்லா ஒளிக் கற்களைக் களவாடிப் பன்முறை அன்புக் கரைக்குப் பரிசாய் அளித்தேன் ! மௌன மாக எடுத்துக் கொண்டான் ! நானின்னும் கொடுத்தாலும் வாங்கிக் கொள்ள தயக்க மில்லை எப்போதும் ! நடுநிசிப் பொழுதில் உயிர்ப் பிராணிகள் எல்லாம் ஆழ்ந்த உறக்கத்தை நாடி மூழ்கிப் போன வேளையில் அமர்ந் திருந்தேன் நான் பாடிக் கொண்டு ஒரு சமயம் ! பெரு மூச்சை விட்ட படி மறு சமயம் ! உறக்க மில்லை எப்போதும் எனக்கு மட்டும் ! எழுப்பி விட்ட தென்னை ஐயகோ ! எனது விழிப்புத் தன்மை ! ஆயினும் மனித நேயன் நான் சத்தி யத்தைக் காதலிக்கும் சித்த வலு பெற்றவன் நான் ! களைத்துப் போயினும் ஒருபோதும் மரண மில்லை எனக்கு ! ++++++++++++++ காதல் சேயிடம் என் இதயம் கேட்டது : “அன்பே ! எங்கே நான் மனநிறைவைக் காண்பேன் ? உன்னுடன் சேர இங்கு அது வரப் போவதாய்க் கேள்விப்பட்டேன்.” காதல் சேய் அதற்குப் பதில் உரைத்தாள் : “பேராசையும், லஞ்சமும் முதன்மையான நகருக்கு மன நிறைவு ஏற்கனவே உபதேசம் செய்யப் போய் விட்டாள். நமக்கு அவள் தேவை யில்லை.”கலில் கிப்ரான் (The House of Fortune) (Tears & Laughter) “உனக்கு வலி உண்டாகும், நீ புரிந்து கொண்ட அறிவுக் கோட்டை தகர்க்கப்படும் போது.” கலில் கிப்ரான் (1883-1931) “நான் ஏகாந்தத்தைத் தேடியதற்குக் காரணம் : தம்மையே விற்று அதே பணத்திற்குத் தம்மை விடத் தாழ்வான ஆன்மீக அல்லது உலோகாயுதப் பொருட்களை வாங்கும் மனிதரின் முகத்தைக் காணாமல் இருப்பதற்கு !” கலில் கிப்ரான் (From A Treasury of Kahlil Gibran 1951) << மரணமே கவிஞன் வாழ்வு >> வருவாய் அழகிய மரணமே ! வாஞ்சை யோடு ஏங்கிடும் உன்னைத்தான் என் ஆத்மா ! வா என்னை நெருங்கி ! வந்தென் வாழ்க்கையின் இரும்புத் தளைகளை அவிழ்த்திடு ! களைத்துப் போனேன் அவற்றின் கனத்தைச் சுமந்து ! வருவாய் இனிய மரணமே ! வந்தென்னை விடுவிப்பாய் வழிப் போக்கனாய் என்னை நோக்கிடும் பக்கத்துச் சொந்த பந்தங்களிருந்து ! என்னெனில் நான் அவருக்கு விளக்கிச் சொல்வேன் தேவதை களின் வாசகத்தை ! வருவாய் மௌன மரணமே ! இருட்டு மூலை மறதியில் விட்டுச் சென்ற என்னை கடத்திச் செல் இந்தக் கும்பலிட மிருந்து ! எனெனில் எளியவர் குருதியை நான் அவரைப் போல் பிழிந்திட மாட்டேன் ! வருவாய் சாந்த மரணமே ! இழுத்துக் கொள் என்னை உந்தன் வெள்ளை இறக்கைக் குள்ளே ! ஏனெனில் என்னாட்டு மாந்தருக்கு இனி நான் தேவை யில்லாதவன் ! தழுவிடு என்னை மரணமே ! முழுப் பரிவோடு அன்பு கொண்டு ! உன் உதடுகள் தொடட்டும் என் உதடுகளை ! அன்னையின் முத்தங்கள் சுவைக் காதவை ! தங்கையின் கன்னத்தைத் தடவா தவை ! அருமைக் காதலியின் விரல் நுனிகளை வருடா தவை ! வா வந்தென்னை ஏற்றுக் கொள் என்னினிய மரணக் காதலி ! (From : “A Poet’s Death is His Life” By Kahlil Gibran) +++++++++++++ “கலைத்துவம் என்பது புதிராகவும், மறைந்தும் இருப்பவற்றுள் நமக்கு வெளிப்படையாய்த் தெரிவதை விட ஒரு படி உயர்ந்தது ! “எழில் (Beauty) என்பது கண்ணாடியில் தன்னையே நோக்கிக் கொள்ளும் முடிவில்லாமை (Eternity).” கலில் கிப்ரான் (1883-1931) “நான் உலகத்தை விட்டு ஏகாந்தத்தைத் தேடியதற்குக் காரணம் : பணிவு என்பது பலவீனம் என்றும், பரிவு என்பது கோழைத்தனம் என்றும், செல்வப் பகட்டு ஒருவித வலுவென்றும் நம்பிடும் பல்வேறு மாந்தருக்கு மதிப்பளிப்பதில் நான் களைப்படைந்து போவதே !” கலில் கிப்ரான் (From A Treasury of Kahlil Gibran 1951) << வாழ்க்கையின் விளையாட்டுக் களம் >> ஒரு மணி நேரமே ஒதுக்கப் பட்டது அழகைத் தேடும் முயற்சிக்கு ! மெலியோர் அஞ்சி வலியோர்க்கு அளித்திடும் பூரண நூற்றாண்டுக் கீர்த்திக்குக் காதல் தகுதி பெறும் ! அந்த நேரத்தில் தான் வெளிப்படும் மனிதனின் இயற்கைத் தன்மை ! அந்த நூற்றாண்டில் தான் உறங்கிடும் மெய்ப்பாடு தடுமாற்றக் கனவுகளின் நடுங்கும் கைகளுக்கு இடையே ! அந்த நேரத்தில் தான் ஆத்மா நோக்கிக் கொள்ளும் தனக்காக இயற்கையின் நியதியை ! அந்த நூற்றாண்டுக் காக தன்னைத் தானே ஆத்மா சிறையிட்டுக் கொள்ளும் மனித விதியின் பின்னே ! அடக்கு முறை இரும்பு விலங்கு மாட்டப்படும் ஆத்மாவுக்கு ! அந்த நேரம் தான் உள்ளுணர்ச்சி எழுந்திடும் சாலமனின் இசைப் பாக்களால் ! அந்த நூற்றாண்டில் தான் குருட்டுத்தன அதிகாரம் பால்பெக்* கோயிலைப் (1) பாழாக்கியது ! அந்த நேரம் தான் (ஏசு கிறித்துவின்) “மலைப் பேருரை” உதித்தது ! அந்த நூற்றாண்டில் தான் தகர்க்கப் பட்டன பல்மைராக்* கோட்டைகளும் (2) பாபிலோன் கோபுரமும் ! அந்த நேரம் தான் முகமது நபி மெக்காவுக்குப் பயணம் இருந்தது ! அந்த நூற்றாண்டு தான் மறந்தது அல்லாவை ! கொல்கொதாவை* (3) ! சினாய் மலையை ! ********* 1. பால்பெக்* கோயில் (Baalbek Ruined Temple in Lebanon) 2. Palmyra is an ancient city of central Syria, 3. கொல்கொதா (Golgotha) (ஏசு கிறிஸ்துவைச் சிலுவையில் அறைந்த இடம்) ++++++++++++++ சுதந்திர மனிதர் நாம் ! சுதந்திர மனிதர்கள் நாம் ! கிழக்கையோ மேற்கையோ தழுவியோர் அல்லர் ! எல்லைக் கோடுகள் நமது இதயத்தில் இல்லை ! சிலுவை, பிறை நிலவை வழிபடுவோர் இல்லை ! ஏசுவையோ புத்தரையோ நேசிப்போர் இல்லை ! யூதர் மீதோ, இஸ்லாமியர் மீதோ பேதமை இல்லை ! சுதந்திர மனிதர்கள் நாம் ! கலில் கிப்ரான் (From “A Chant of Mystics” & Other Poems 1921) நான் ஏகாந்தத்தைத் தேடினேன், போலி அறிவைத் (Spectre of Knowledge) தமது கனவுகளில் கண்டு கொண்டு அவரது குறிக்கோளை அடைந்து விட்டதாக நம்பிடும் சுயநல வாதிகளிடமிருந்து என்னை மறைத்துக் கொள்ள !” கலில் கிப்ரான் (From A Treasury of Kahlil Gibran 1951) << வாழ்க்கையின் விளையாட்டுக் களம் >> ஒரு மணி நேரமே ஒதுக்கப் பட்டது பலவீனரின் களவு போன சமத்துவத்தைப் பற்றி நாம் கவலைப் படுவதற்கும் மனம் நோவ தற்கும் ! பேராசையும் பெரும் பதவி மோகமும் நிரம்பிய நூறாண்டை விட அது பாராட்டத் தக்கது ! அந்த மணி நேரத்தில்தான் எந்தன் இதயம் சுத்த மானது துக்கத்தைச் சூடாக்கி காதல் விளக்கேற்றி கதிரொளி வீசிக் கொண்டு ! அந்த நூற்றாண்டில் தான் மெய்ப்பாடைத் தேடும் வேட்கை மேதினியின் நெஞ்சுக்குள் மேவியது ! அந்த மணி நேரத்தில் வேரிட்டன ஓங்கி உயர்வ தெல்லாம் ! அந்தத் தருணம் தான் மௌன தியானத்தின் மணிக் கணக் கானது தியான வேளை, பிரார்த்தனை வேளை புதிய யுகத்தின் நன்னெறி வேளை ! அந்த நூற்றாண்டு தான் நீரோ மன்னன் வாழ்க்கை மண் பொருள் மூலமாய்த் தன்னையே அர்ப்பணிக்கும் ! யுக யுகமாய் நாடக அரங்கில் காட்சி தரும் வாழ்க்கை இதுதான் ! ஏட்டில் பதிக்கப் பட்டது நூறாண் டுகளாய் ! புதிராய்ப் பல்லாண்டுகள் நீடித்தது ! பாக்களாய் அதனைப் பாடியது பல நாட்களாய் ! ஒரு மணி நேரத்தில் உன்னத மானது ! ஆனால் அத்தருணம் முடிவில்லாத மாணிக்கக் கல்போல் நிலை பெற்றது மதிப்புடன் ! ++++++++++++++ உன்னிதயம் ஓர் எரிமலையாக இருக்குமேயானால் அதிலிருந்து பூக்கள் மலரும் என்று எப்படி நீ எதிர்பார்க்கலாம் ?” “அழ முடியாத அறிவு, புன்னகை சிந்தாத வேதாந்தம், குழந்தைகள் முன் பணியாத உன்னதம் ஆகியவற்றிலிருந்து நீ விலகி நில்.” “விடுதலை இல்லாத வாழ்வு ஆன்மா இல்லாத உடம்பை ஒத்தது.” “ஆன்மா ஆழ்ந்து செழிப்புறுவதைத் தவிர நட்பில் வேறெந்தக் குறிக்கோளும் இருக்கக் கூடாது.” கலில் கிப்ரான். << கவிஞன் யார் ? >> இந்த உலகிற்கும் எதிர்கால உலகிற்கும் இணைப்புப் பாலம் அவன். தாகமுற்ற ஆத்மாக்கள் தண்ணீர் குடிக்க வந்திடும் தூய நீர் ஊற்று அவன். எழில் நதி நீர் பாய்ச்சிப் பசித்தோர் பசி அடக்கும் பழங்கனி காய்க்கும் மரம் அவன். இன்னிசைக் கானம் பாடி மனத்தாழ்வை ஒழிக்கும் வானம் பாடி ! விண்வெளி முகம் முழுதும் நிரம்பும் வரை அடிவான் மீது மேலும் கீழும் தோன்றும் வெண்முகில் அவன். பின்பு ஒளியை அனுமதிக்க வாழ்வுத் தள மலர்கள் மேல் படிந்து இதழ்களை விரிப்பான் ! தெய்வம் அனுப்பிய தேவன் அவன் மெய்யான உபதேசம் செய்திட வந்தவன். இருள் வெல்லாத ஒளிச்சுடர் விளக்கு ! புயல் அணைக்காத ஒளி விளக்கு. காதல் தேவதை எண்ணை ஊற்றி இசைக் கீதம் ஏற்றிய தீபம் ! ஏகாந்த வாதி அவன் ! பரிவோடு எளிய உடை உடுப்பவன் அவன் ! உள்ளெழுச்சி தனைத் தூண்டி விட இயற்கை மடி மீது அமர்பவன் அவன் ! ஆத்மீகம் வரவேற்கக் காத்திருந்து இரவு மௌனத்தில் தியானிப் பவன் ! தனது இதயத்தில் விதைகளை நட்டு வைத்து வன வயல்களில் பரிவு விதை விதைப்பவன். மனித இனம் அவற்றை அறுவடை செய்யும் தமக்குணவாய் ஊட்டித் தான் வளர்வதற்கு ! ++++++++++++ மகா மேதைகள் என் தேசத்தின் ஊழ்விதி கவிதை -30 பாகம் -2 மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா “உன் தேசத்தின் ஊழ்விதியும் என் தேசத்தின் ஊழ்விதியும் இனி எவ்விதம் இருக்கும் ? எந்தப் பூத வேந்தன் பரிதிக்கு முன்னால் நாம் பிறந்து வளர்ந்து நம்மை ஆடவர் மாதராய் ஆளாக்கிய குன்றுகளையும், சமவெளிகளையும் ஆக்கிரமிப்பான் ? புதிய யுகம் ஒன்று காலையில் புலர்ந்து லெபனான் சிகரத்தின் மீது தோன்றுமா ? ஏகாந்தனாய் உள்ள ஒவ்வொரு சமயத்திலும் நான் இந்த வினாக்களை என் ஆத்மாவிடம் கேட்கிறேன். ஆனால் ஊழ்விதி அதிபனைப் போல் என் ஆத்மா ஊமையாக இருக்கிறது.” கலில் கிப்ரான். (The Giants) ++++++++++++++++++++++++ << என் தேசத்தின் ஊழ்விதி >> ++++++++++++++++++++++++ இராப் பகலாகச் சிந்திக் காதவர் எவர் உங்களில் இருக்கிறார் போதை ஏறிய பூத மன்னர் ஆட்சியில் விதவைகள் கண்ணீரும் அனாதைகள் அழுதிடும் நீரும் விழுந்திடும் உலகத்து ஊழ் விதியை ஒரு பொழு தேனும் எண்ணாமல் ? பரிணாம விதியை நம்புவோரில் ஒருவன் நானும் ! பூரண விடுதலைப் புரட்சிகள் கோர மாந்தரால் உதித்தெழும் என்று நம்புவோன் நான் ! மதங்களும் அரசாங் கமும் உன்னத பீடத்துக் குயரும் என்று நம்புவோன் நான் ! எனைச் சுற்றி இருப்பவர் அனைவரும் பூதங்கள் உதிப்பதைக் காணும் குள்ளர்கள் ! தவளைகள் போல் கத்துவார் இந்தக் குள்ளர் ! இவ்வுலகம் காட்டு மிராண்டிகள் இருப்பிட மாய்த் திருப்பி வந்துள்ளது ! விஞ்ஞானக் கல்வி படைத்தவை இந்தப் புது ஆதி வாசிகளால் அந்த மாகி அழிந்தன ! கற்காலத்துக் குகை வாசிகளாய் தற்போது மாறி விட்டோம் ! நாம் படைத்த நாச எந்திரங்களும் நுணுக்கத் தொழிற் துறைக் கொலைக் கருவிகளும் மினுப்பதைத் தவிர நம்மை வேறெதுவும் தனித்துக் காட்டு வதில்லை ! ++++++++++++ (தொடரும்) ************ தகவல் : 1. The Prophet By : Kahlil Gibran, Published By : Senate (2003) 2. The Prophet By : Kahlil Gibran Published, By Wordsworth Editions Ltd. (1996) 3. Tears & Lauhgter By : Kahlil Gibran, Published, By : Castle Books (1993) 4. Thoughts & Meditations By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris [1968] 5. The Voice of The Master By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1967) For further reading: This Man from Lebanon by B. Young (1945); This Man from Lebanon by B. Young (1945); Kahlil Gibran: A Biography by M. Naimy (1959); The Parables of Kahlil Gibran by A.S. Otto (1963); Kahlil Gibran by K.S. Hawi (1963); An Introduction to Kahlil Gibran by S.B. Bushrui (1970); Kahlil Gibran: The Nature of Love by A.D. Sherfan (1971); Kahlil Gibran by J. Gibran and K. Gibran (1975); Gibran of Lebanon, ed. by S.B. Bushrui and P. Gotch (1975); The Meaning of Kahlil Gibran by M.S. Daoudi (1982); The Lebanese Prophets of New York by N. Naimy (1985); Kahlil Gibran of Lebanon by S.B. Bushrui (1987); Modern Arabic Poetry, ed. by Salma Khadra Jayyusi (1987); Kahlil Gibran: A Prophet in the Making by W. Shehadi (1991); Kahlil Gibran: His Life and World by Jean Gibran [1998] For further information: The Prophet By Kahlil Gibran / A Multi media Tribute – Suom.: Gibranin keskeinen tuotanto on julkaistu suomeksi nimellயூ Idயூn ja lயூnnen profeetta, teos Ajan virta sisயூltயூயூ Gibranin mietelauseita. Teokseen Mestarin sanoja (1993) on koottu Gibranin kaksitoista kirjaa. Selected works: • AL-MUSIQA, 1905 • ARA’IS AL MURUDJ, 1906 – Nymphs of the Valley • STONEFOLDS, 1907 • ON THE TRESHOLD, 1907 • AL-ARWAH AL-MUTAMARRIDA, 1908 – Spirits Rebellious – Kapinalliset henget • DAILY BREAD, 1910 • FIRES, 1912 • AL-AGNIHA AL-MUTAKASSIRA, 1912 – The Broken Wings – Sயூrkyneet siivet • DAM’AH WA-IBTISAMAH, 1914 – A Tear and a Smile • THE MADMAN, 1918 – Jumalan tuli • TWENTY DRAWINGS, 1919 • AL-MAWAKIB, 1919 – The Procession • AL-’AWASIF, 1920 • THE FORERUNNER, 1920 – Edellயூkயூvijயூ • THE PROPHET, 1923 – Profeetta • AL-BADA’I’ WA-AL-TARA’IF, 1923 • SAND AND FOAM, 1926 – Merta ja hiekka • JESUS, THE SON OF MAN, 1928 – Jeesus, ihmisen poika, suom. Helmi Krohn • THE EARTH GODS, 1931 – Maan jumalat • THE WANDERER, 1932 – Vaeltaja • GARDEN OF THE PROPHET, 1933 – Profeetan puutarha • PROSE POEMS, 1934 – Temppelin portilla • TEARS AND LAUGHTER, 1946 • THE SECRETS OF THE HEART, 1947 • SPIRIT REBELLIOUS, 1948 • NYMPHS OF THE VALLEY, 1948 • A TREASURY OF KAHLIL GIBRAN, 1951 • THE BROKEN WINGS, 1957 • THE PROCESSION, 1958 • A SELF PORTRAIT, 1959 • THOUGHTS AND MEDITATIONS, 1960 • A SECOND TREASURY OF KAHLIL GIBRAN, 1962 • SPIRITUAL SAYINGS, 1962 • THE VOICE OF THE MASTER, 1963 – Mestarin யூயூni • MIRRORS OF THE SOUL, 1965 • THE WISDON OF GIBRAN, 1966 • SPIRITUAL SAYINGS, 1970 • PROPHESIES OF LOVE, 1971 • BELOVED PROPHET, 1972 • LAZARUS AND HIS BELOVED, 1973 • THE DEATH OF THE PROPHET, 1979 (as remembered by Almitra, channeled through Jason M. Leen) • DRAMAS OF LIFE, 1982 • BLUE FLAME, 1983 • KAHLIL GIBRAN: PAINTINGS AND DRAWINGS 1905-1930

மகாகவி பாரதியார் கவிதைகள்

மகாகவி பாரதியார் கவிதைகள் தேசீய கீதங்கள் 1.பாரத நாடு 1. வந்தே மாதரம் 2. வந்தே மாதரம் 3. வந்தே மாதரம் 4. பாரத நாடு 5. பாரத தேசம் 6. எங்கள் நாடு 7. ஜயபாரதம்! 8. பாரத மாதா 9. எங்கள் தாய் 10. வெறி கொண்ட தாய் 11. பாரத மாதா திருப்பள்ளியெழுச்சி 12. பாரத மாதா நவரத்தின மாலை 13. பாரத தேவியின் திருத்தசாங்கம் 14. தாயின் மணிக்கொடி 15. பாரத ஜனங்களின் தற்கால நிலைமை 16. போகின்ற பாரதமும்-வருகின்ற பாரதமும் 17. பாரத சமுதாயம் 18. ஜாதீய கீதம்-1(மொழிபெயர்ப்பு) 19. ஜாதீய கீதம்-2(புதிய மொழி பெயர்ப்பு) 2.தமிழ் நாடு 20. செந்தமிழ் நாடு 21. தமிழ்த் தாய் 22. தமிழ் 23. தமிழ்மொழி வாழ்த்து 24. தமிழ்ச் சாதி 25. வாழிய செந்தமிழ் 3.சுதந்திரம் 26. சுதந்திரப் பெருமை 27. சுதந்திரப் பயிர் 28. சுதந்திர தாகம் 29. சுதந்திர தேவியின் துதி 30. விடுதலை 31. சுதந்திரப் பள்ளு 4. தேசீய இயக்கப் பாடல்கள் 32. சத்ரபதி சிவாஜி 33. கோக்கலே சாமியார் பாடல் 34. தொண்டு செய்யும் அடிமை 35. நம்ம ஜாதிக்கு அடுக்குமோ? 36. நாம் என்ன செய்வோம்! 37. பாரத தேவியின் அடிமை 38. வெள்ளைக்கார விஞ்ச்துரை கூற்று 39. தேச பக்தர் சிதம்பரம்பிள்ளை மறுமொழி 40. நடிப்புச் சுதேசிகள் 5. தேசீயத் தலைவர்கள் 41. மகாத்மா காந்தி பஞ்சகம் 42. குரு கோவிந்தர் 43. தாதாபாய் நவுரோஜி 44. பூபேந்திரர் விஜயம் 45. வாழ்க திலகன் நாமம் 46. திலகர் முனிவன் கோன் 47. லாஜபதி 48. லாஜபதியின் பிரலாபம் 49. வ.உ.சி.-க்கு வாழ்த்து 6. பிற நாடுகள் 50. மாஜினியின் சபதம் 51. பெல்ஜியத்திற்கு வாழ்த்து 52. புதிய ருஷியா 53. கரும்புத் தோட்டத்திலே இரண்டாம் பாகம் தெய்வப் பாடல்கள் 1. தோத்திப் பாடல்கள் 1. விநாயகர் நான்மணி மாலை 2. முருகா! முருகா! 3. வேலன் பாட்டு 4. கிளிவிடு தூது 5. முருகன் பாட்டு 6. வள்ளிப் பாட்டு-1 7. வள்ளிப் பாட்டு-2 8. இறைவா! இறைவா! 9. போற்றி அகவல் 10. சிவ சக்தி 11. காணி நிலம் வேண்டும் 12. நல்லதோர் வீணை 13. மஹாசக்திக்கு விண்ணப்பம் 14. அன்னையை வேண்டுதல் 15. பூலோக குமாரி 16. மஹாசக்தி வெண்பா 17. ஓம் சக்தி 18. பராசக்தி 19. சக்திக் கூத்து 20. சக்தி 21. வையம் முழுதும் 22. சக்தி விளக்கம் 23. சக்திக்கு ஆத்ம சமர்ப்பணம் 24. சக்தி திருப்புகழ் 25. சிவசக்தி புகழ் 26. பேதை நெஞ்சே 27. மஹாசக்தி 28. நவராத்திரிப் பாட்டு(உஜ்ஜயினீ) 29. காளிப்பாட்டு 30. காளி ஸ்த்தோத்திரம் 31. யோக சித்தி 32. மகா சக்தி பஞ்சகம் 33. மஹாசக்தி வாழ்த்து 34. ஊழிக்கூத்து 35. காளிக்குச் சமர்ப்பணம் 36. காளி தருவாள் 37. மஹா காளியின் புகழ் 38. வெற்றி 39. முத்துமாரி 40. தேச முத்துமாரி 41. கோமதி மஹிமை 42. சாகா வரம் 43. கோவிந்தன் பாட்டு 44. கண்ணனை வேண்டுதல் 45. வருவாய் கண்ணா! 46. கண்ண பெருமானே! 47. நந்த லாலா 48. கண்ணன் பிறப்பு 49. கண்ணன் திருவடி 50. வேய்ங்குழல் 51. கண்ணம்மாவின் காதல் 52. கண்ணம்மாவின் நினைப்பு 53. மனப் பீடம் 54. கண்ணம்மாவின் எழில் 55. திருக்காதல் 56. திருவேட்கை 57. திருமகள் துதி 58. திருமகளைச் சரண்புகுதல் 59. ராதைப் பாட்டு 60. கலைமகளை வேண்டுதல் 61. வெள்ளைத் தாமரை 62. நவராத்திரிப் பாட்டு(மாதா பராசக்தி) 63. மூன்று காதல் 64. ஆறு துணை 65. விடுதலை வெண்பா 66. ஜெயம் உண்டு 67. ஆரிய தரிசனம் 68. சூரிய தரிசனம் 69. ஞாயிறு வணக்கம் 70. ஞானபாநு 71. சோமதேவன் புகழ் 72. வெண்ணிலாவே! 73. தீ வளர்த்திடுவோம்! 74. வேள்வித் தீ 75. கிளிப் பாட்டு 76. யேசு கிறிஸ்து 77. அல்லா 2. ஞானப் பாடல்கள் 78. அச்சமில்லை 79. ஜெய பேரிகை 80. சிட்டுக் குருவியைக் போலே 81. விடுதலை வேண்டும் 82. வேண்டும் 83. ஆத்ம ஜெயம் 84. காலனுக்கு உரைத்தல் 85. மாயையைப் பழித்தல் 86. சங்கு 87. அறிவே தெய்வம் 88. பரசிவ வெள்ளம் 89. பொய்யோ?மெய்யோ 90. நான் 91. சித்தாந்தச் சாமி கோயில் 92. பக்தி 93. அம்மாக்கண்ணு பாட்டு 94. வண்டிக்காரன் பாட்டு 95. கடமை அறிவோம் 96. அன்பு செய்தல் 97. சென்றது மீளாது 98. மனத்திற்குக் கட்டளை 99. மணப் பெண் 100. பகைவனுக்குகருள்வாய் 101. தெளிவு 102. கற்பனையூர் மூன்றாம் பாகம் பல்வகைப் பாடல்கள் 1. நீதி 1. புதிய ஆத்திசூடி 2. பாப்பாப் பாட்டு 3. முரசு 2.சமூகம் 4. புதுமைப் பெண் 5. பெண்கள் வாழ்க! 6. பெண்கள் விடுதலைக்கும்மி 7. பெண் விடுதலை 8. தொழில் 9. மறவன் பாட்டு 10. நாட்டுக் கல்வி 11. புதிய கோணங்கி 3.தனிப் பாடல்கள் 12. காலைப் பொழுது 13. அந்திப் பொழுது 14. நிலாவும் வான்மீனும் காற்றும் 15. மழை 16. புயற் காற்று 17. பிழைத்த தென்னந்தோப்பு 18. அக்கினிக் குஞ்சு 19. சாதாரண வருஷத்துத் தூமகேது 20. அழகுத் தெய்வம் 21. ஒளியும் இருளும் 22. சொல் 23. கவிதைத் தலைவி 24. கவிதைத் காதலி 25. மது 26. சந்திரமதி 4. சான்றோர் 27. தாயுமானவர் வாழ்த்து 28. நிவேதிதா 29. அபேதாநந்தா 30. ஓவியர்மணி இரவிவர்மா 31. சுப்பராம தீட்சிதர் 32. மகாமகோபாத்தியாயர் 33. வெங்கடேசு ரெட்டப்ப பூபதி 34. ஹிந்து மதாபிமான சங்கத்தார் 35. வேல்ஸ் இளவரசருக்கு நல்வரவு 5. சுய சரிதை 36. கனவு 37. பாரதி அறுபத்தாறு 6. வசன கவிதை 38. காட்சி 39. சக்தி 40. காற்று 41. கடல் 42. ஜகத் சித்திரம் 43. விடுதலை நான்காம் பாகம் முப்பெரும் பாடல்கள் 1. கண்ணன் பாட்டு 1. கண்ணன்-என் தோழன் 2. கண்ணன்-என் தாய் 3. கண்ணன்-என் தந்தை 4. கண்ணன்-என் சேவகன் 5. கண்ணன்-என் அரசன் 6. கண்ணன்-என் சீடன் 7. கண்ணன்-என் சற்குரு 8. கண்ணம்மா-என் குழந்தை 9. கண்ணன்-என் விளையாட்டுப் பிள்ளை 10. கண்ணன்-என் காதலன் 11. கண்ணன்-உறக்கமும் விழிப்பும் 12. கண்ணன்-காட்டிலே தேடுதல் 13. கண்ணன்-பாங்கியைத் தூது விடுத்தல் 14. கண்ணன்-பிரிவாற்றாமை 15. கண்ணன்-என் காந்தன் 16. கண்ணம்மா-என் காதலி காட்சி வியப்பு 17. கண்ணம்மா-என் பின்னே வந்து நின்று கண் மறைத்தல் 18. கண்ணம்மா-என் முத்திரை களைதல் 19. கண்ணம்மா-என் நாணிக் கண் புதைத்தல் 20. கண்ணம்மா-என் குறிப்பிடம் தவறியது 21. கண்ணம்மா-என் யோகம் 22. கண்ணம்மா-என் ஆண்டான் 23. கண்ணம்மா- எனது குலதெய்வம் 2. பாஞ்சாலி சபதம் முதற் பாகம் துரியோதனன் சூழ்ச்சிச் சருக்கம் 1. பிரம்ம ஸ்துதி 2. சரஸ்வதி வணக்கம் 3. ஹஸ்தினாபுரம் 4. துரியோதனன் சபை 5. துரியோதனன் பொறாமை 6. துரியோதனன் சகுனியிடம் சொல்வது 7. சகுனியின் சதி 8. சகுனி திரிதராட்டிரனிடம் சொல்லுதல் 9. திரிதராட்டிரன் பதில் கூறுதல் 10. துரியோதனன் சினங் கொள்ளுதல் 11. துரியோதனன் தீமொழி 12. திரிதராட்டிரன் பதில் 13. துரியோதனன் பதில் 14. திரிதராட்டிரன் சம்மதித்தல் 15. சபா நிர்மாணம் 16. விதுரனைத் தூது விடல் 17. விதுரன் தூது செல்லுதல் 18. விதுரனை வரவேற்றல் 19. விதுரன் அழைத்தல் 20. தருமபுத்திரன் பதில் 21. விதுரன் பதில் 22. தருமபுத்திரன் தீர்மாணம் 23. வீமனுடைய வீரப்பேச்சு 24. தருமபுத்திரன் முடிவுரை 25. நால்வரும் சம்மதித்தல் 26. பாண்டவர் பயணமாதல் 27. மாலை வருணனை சூதாட்டச் சருக்கம் 28. வாணியை வேண்டுதல் 29. பாண்டவர் வரவேற்பு 30. பாண்டவர் சபைக்கு வருதல் 31. சூதுக்கு அழைத்தல் 32. தருமன் மறுத்தல் 33. சகுனியின் ஏச்சு 34. தருமனின் பதில் 35. சகுனி வல்லுக்கு அழைத்தல் 36. தருமன் இணங்குதல் 37. சூதாடல் 38. நாட்டை வைத்தாடுதல் இரண்டாம் பாகம் அடிமைச் சருக்கம் 39. பராசக்தி வணக்கம் 40. சரஸ்வதி வணக்கம் 41. விதுரன் சொல்லியதற்குத் துரியோதனன் மறுமொழி சொல்லுதல் 42. விதுரன் சொல்வது 43. சூது மீட்டும் தொடங்குதல் 44. சகுனி சொல்வது 45. சஹாதேவனைப் பந்தயம் கூறுதல் 46. நகுலனை இழத்தல் 47. பார்த்தனை இழத்தல் 48. வீமனை இழத்தல் 49. தருமன் தன்னைத்தானே பணயம் வைத்திழத்தல் 50. துரியோதனன் சொல்வது 51. சகுனி சொல்வது திரௌபதியைச் சபைக்கு அழைத்த சருக்கம் 52. திரௌபதியை இழத்தல் 53. திரௌபதி சூதில் வசமானது பற்றிக் கௌரவர் கொண்ட மகிழ்ச்சி 54. துரியோதனன் சொல்வது 55. திரௌபதியைத் துரியோதனன் மன்றுக்கு அழைத்து வரச் சொல்லியது பற்றி ஜகத்தில் உண்டான அதர்மக் குழப்பம் 56. துரியோதனன் விதுரனை நோக்கி உரைப்பது 57. விதுரன் சொல்வது 58. துரியோதனன் சொல்வது 59. திரௌபதி சொல்லுதல் 60. துரியோதனன் சொல்வது சபதக் சருக்கம் 61. துச்சாதனன் திரௌபதியைச் சபைக்குக் கொணர்தல் 62. திரௌபதிக்கும் துச்சாதனனுக்கும் சம்வாதம் 63. சபையில் திரௌபதி நீதி கேட்டழுதல் 64. வீட்டுமாசார்யன் சொல்வது 65 திரௌபதி சொல்வது 66. வீமன் சொல்வது 67. அர்ஜீனன் சொல்வது 68. விகர்ணன் சொல்வது 69. கர்ணன் பதில் 70. திரௌபதி கண்ணனுக்குச் செய்யும் பிரார்த்தனை 71. வீமன் செய்த சபதம் 72. அர்ஜீனன் சபதம் 73. பாஞ்சாலி சபதம் 3. குயில் பாட்டு 1. குயில் 2. குயிலின் பாட்டு 3. குயிலின் காதற் கதை 4. காதலோ காதல் 5. குயிலும் குரங்கும் 6. இருளும் ஒளியும் 7. குயிலும் மாடும் 8. நான்காம் நாள் 9. குயில் தனது பூர்வ ஜன்மக் கதையுரைத்தல் புதிதாகச் சேர்க்கப் பெற்ற பாடல்கள் 1. உயிர் பெற்ற தமிழர் பாட்டு 2. இளசை ஒருபா ஒருபஃது உலகின் தலையெழுத்தை மாற்றும் வித்தியாசமான